ஞாயிறு, 21 டிசம்பர், 2025

நற்கீறல் வரைவுகள்

ஒவ்வொரு கிழமையும் வெள்ளியன்று ஓவியர்கள் ஒன்றாக சென்னையிலுள்ள குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வரைவது வழக்கம், எங்கள் குழுவிற்கு நற்கீறல் என்று பெயர்.


கீழுள்ள படங்கள் தூவல் கொண்டு இடங்களை அல்லது பொருட்களை நேரடியாகக் கவனித்து வரைந்தவை.

குன்றத்தூர் சேக்கிழார் இல்லம், இப்போது கோவிலாக உள்ளது

வள்ளுவர் கோட்டம் தேர்

கிண்டி சிறுவர் பூங்காவிலுள்ள மரம், என்ன மரம் என அறிந்து கொண்டு வந்திருக்க வேண்டுமென இப்பாது தோன்றுகிறது.

SARAA  ART CLASS-ல் மழையை எதிர் நோக்கிய ஒரு நாளில் ஓவியக் கூடத்தில் பொருட்களை கவனித்திருந்த போது
SARAA ART CLASS-ல் ஒரு மழை நாளில் புத்தரைக் கண்டபோது




வியாழன், 11 டிசம்பர், 2025

அக்கா குருவி 26

ஆலமரத்து நிழல்
அடிவயிற்றுப் பசி
அன்றாடப் பறவைக்கும் எனக்கும்
இடையில் ஒற்றைப்பருக்கை
சேர்ந்து பாடினோம்

கா...கா...கா
கா...கா...கா