*
ஒளிப்பதிவு பற்றி அறியக்கூடிய அரிய தகவல்களையும் நுட்பங்களையும் எளிய மொழியில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் இந்துவில் சி.ஜே ராஜ்குமார் எழுதி வரும் தொடரில் இன்று ஒப்பனையும் ஒளிப்பதிவும் எவ்விடத்தில் இணைந்து சிறப்புற பணியாற்றி சிறந்த படைப்புகளை உருவாக்க இயலும் என்பதற்குரிய நுட்பங்களை விவரித்திருப்பது தொடர்ந்த தேடலுக்கு உரமூட்டுவதாக இருக்கிறது எப்படி ஓவியத்தில் ஒளிநிழல் பிரித்து படைப்பை உண்மை நிலைக்கு நெருக்கமாக உருக்கொண்டு வருகிறோமோ அதே போலவே ஒளிப்பதிவிலும் ஒளியின் தன்மை மற்றும் ஒப்பனையின் தன்மை இரண்டும் இணைந்து எவ்வகையில் திரைக்கதைக்கு உயிரோட்டம் கொடுக்கிறது என்பது கலைகள் ஒன்றுக்கொன்று பிணைந்து வாழ்வை காட்சிப்படுத்தும் அழகியல். ஓவியம் பற்றிய தேடலுக்கும் இந்த வாசிப்பு உந்துதலை ஏற்படுத்துகிறது.