சனி, 4 அக்டோபர், 2025
சுதேசி எனும் பரதேசி
சனி, 12 அக்டோபர், 2024
தினமலர் எனும் விசம்
புதன், 23 ஆகஸ்ட், 2023
தமிழைப் படுகொலை செய்யும் தமிழினத் தலைவர்கள்
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023
வாடகை மானுடம்
ஒரு மாலையில் தெருவாசல் ஓரம் குழந்தைகளோடு இறகுப் பந்து விளையாடிவிட்டு உட்செல்ல எத்தனிக்கையில் இருசக்கர வண்டியில் பின்னாலிருந்தவர் இறங்கி வந்து இந்த பகுதியில் இடம் எவ்வளவு போகிறது என்றார். சரியாகத் தெரியவில்லை ஆனால் விளம்பரங்களை பார்க்கையில் நான்காயிரத்து ஐநூறு கிட்ட ஒரு சதுர அடி இருக்கலாம் என்றேன். எவ்வளவு ஆண்டாக இங்கே இருக்கீங்க என்றதும் எட்டு எனச் சொன்னேன், எட்டு ஆண்டுகளா வாடகை வீட்டுலயா என்று எடை போட்டார். இப்போது வண்டியை ஓட்டி வந்தவர் இறங்கினார் அவரது பையனாக இருக்கலாம் எனத் தோன்றியது, சாலையோரம் கட்டடங்களை இடித்திருக்கிறார்களே எதற்காக என்றார், சாலை விரிவாக்கம் என்று கூறுகிறார்கள் ஆனால் உறுதியாக தெரியவில்லை என்றதும். பின்னாலிருந்தவர் இடத்தோட விலை கூடுமா என்றார், மின்ன இருந்ததுக்கும் இப்போதைக்குமே கூடியிருக்கு என புன்னகை உதிர்த்து ஆனால் தெரியவில்லை என்று உட்புகுந்தேன்.
நாங்கள் இங்கு குன்றத்தூரிலிருந்து பல்லாவரம் போகும் பாதையில் உள்ள மணிகண்டன் நகருக்கு வந்த புதிதில் இப்போது குடியிருக்கும் வீட்டுக்குப் பின்புறத்தில் பெரியதொரு தோல் தொழிற்சாலை இருந்தது அதன் சுற்றுப்புறச் சுவரை அடுத்து சாலையோரம் மக்கள் பல தலைமுறைகளாக குடிசையில் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு "கம்பெனி" என்றே பெயர். சில ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது, மக்கள் குடியிருப்புக்கள் மணிகண்டன் நகரில் அதிகமானதால் இத்தொழிற்சாலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பது அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது.
சனி, 27 மே, 2023
காக்கைகள் இல்லாத ஊர்
வியாழன், 4 ஆகஸ்ட், 2022
தொடர் வரைவு நான்கும் - கல்வியும்
பொதுவாக நாம் எல்லோரிடமுமே (அரசியல் கட்சியின் பக்தர்கள் தவிர்த்து) அரசாங்கம் பற்றிய ஒவ்வாமையும், அரசின் திட்டங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து ஒதுங்கும் தன்மையும் இருக்கும். அரசாங்கப் பள்ளியில் படிப்பதற்கு பணம் கட்டத் தேவையில்லையாமே என்று ஒருவர் கேட்டதும் எனக்கு பரிதாபமாக இருந்தது அவரின் நிலையை எண்ணி, இது ஒவ்வாமையில்லை முற்றிலுமாக அறியாமை, அவ்விடம் விட்டு அவர் கிளம்பும் போது அவரது இரு சக்கர வாகனத்தில் காவல் என ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை கவனித்தேன், பரிதாபம் மேலும் கூடிவிட்டது. இப்பாது அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதற்குச் சென்றால் நேரடியாக ஆங்கில வழி வகுப்பிலேயே அமர்த்தி விடுவார்கள் என்றே தோன்றுகிறது, இரு வருடம் முன்னர் ஆங்கில வழியில் அரசு உதவி பெறும் நான் படித்த பள்ளியில் படிக்கும் நண்பனின் மகள் புத்தகத்தை காணும் போது அதிர்ச்சி, ஆங்கிலத்தில் இருப்பதை இப்பிள்ளைகள் வாசிக்க தமிழை ஆங்கிலத்தில் அச்சிட்டிருந்தார்கள், இது என்னடா நம் பிள்ளைகளுக்கு வந்த சோதனை என்று மனம் புழுங்கியது.
இப்பாது அதே போன்ற புத்தகம் கிடைக்குமா என இணையத்தில் தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை. நேரடி வகுப்பில் கொடுத்திருக்கிறார்களா எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
ஞாயிறு, 19 ஏப்ரல், 2020
இது யாருடைய வகுப்பறை - வாசிப்பு
சனி, 9 நவம்பர், 2019
மின்னூல் உருவாக்கம்
அவ்வப்போது எனது வலைப்பூவில்(BLOG - https://pandianinpakkangal.blogspot.com/?m=1) எழுதிய சில பக்கங்களை மின்னூலாக மாற்றலாம் என்ற எண்ணத்தை இச்சையெனக் கடந்து போகாமல் திட்டமிடத் தொடங்கியிருக்கிறேன். விரைவில் வெளிவருமென நம்பலாம்!
நன்றி Vimaladhitha Maamallan அமேசானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி
https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-publish-ebook/dp/B07XWD47FT/ref=sr_1_1?crid=1O59BZLJDU1D0&keywords=vimaladhitha+maamallan&qid=1573312906&sprefix=vimaladhith%2Caps%2C292&sr=8-1
செவ்வாய், 26 செப்டம்பர், 2017
பிக்பாஸும் நான்குகாலிகளும் (நாற்காலி)
திங்கள், 7 ஆகஸ்ட், 2017
அப்படியாண்ணே
இப்பதாம்ணே ஒன்றரை வயசாவுது
அது சரிப்பா இந்த "ஃப்ளே ஸ்கூல்"ங்கானுவள அதுல கிதுல
ஃப்ளே ஸ்கூல்னா என்னண்ணே
அதுவந்துடே ஏதோ "கலர் டே"வாம் அன்னைக்கி மாத்திரம் எல்லா பிள்ளியளும் ஒரே கலருல சட்ட போட்டுக்கிட்டு போறதும் கேக் வெட்டி பொறந்தநாள் கொண்டாடுததும் மாதிரி தெரியுதுப்பா.
ஓகோ அப்படியாண்ணேன்...
செவ்வாய், 21 மார்ச், 2017
அடையாற்றில் மலப்புரட்சி
திங்கள், 20 பிப்ரவரி, 2017
அரசியல்வாதிகளின் அந்தரங்கம்
∞
நூறு செயற்கைக்கோள்களை இராக்கெட் மூலம் விண்ணில் விடுவதெல்லாம் சாதனையா? சாக்கடைகளை, முறையான வடிகால்களை உருவாக்குவதன் தேவையை, தாம் வாழும் நிலப்பரப்பில் நீராதாரத்தை பேணுவதற்கு சிந்திக்காத மூளை நிலாவுக்கும் செவ்வாய்க்கும் இயந்திரங்களை அனுப்பி அங்கொரு இயந்திரங்களின் குப்பைத்தொட்டியை உருவாக்க எத்தனிப்பது ஏன்?
சனி, 31 டிசம்பர், 2016
அடையாளத்திற்கு முன் சில கேள்விகள்
பெயரில்லா அழைப்பு வந்தது மனைவியின் கைப்பேசியில், "புது நம்பரா இருக்கு" என்று தொடர்ந்தவளிடமிருந்து புரிந்துகொள்ள முடிந்தது பேசுவது அவளது அப்பாவென்று. அனைத்து அழைப்புகளுக்கும் பத்து பைசா எனக் கூவி விற்றதால் வாங்கியிருக்கிறார், இதுபோல் அவர் வாங்கி பயன்படுத்தி தூக்கியெறிந்த சிம்கார்டுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கக் கூடியதுதான் என்றாலும் நினைவில் இல்லை. மோடியின் ஆதரவாளர், பேசத்தொடங்கினால் கொட்டாவி விட்டபின்னரே நம்மை விடுதலை செய்வார்.
ரிலையன்ஸ் ஒரு ஆதார் அட்டைக்கு மூன்று சிம் கொடுப்பதாக தகவல் உலாவுகிறது, வெளிப்படையாக மூன்று என்றால் மறைமுகமாக எத்தனையோ. இதேபோல் மற்ற நிறுவனங்கள் அதனதன் தகுதிக்கு ஏற்றதுபோல் கொடுக்கலாம். கொடுக்கிறது. தெருவுக்குத் தெரு நிறுத்தத்திற்கு நிறுத்தம் குடை விரித்து, ஆதார் அட்டை மட்டும் போது "No Photo, No Proof" என கூவிக்கூவி விற்கிறார்கள், வாங்கிய 05 நிமிடத்தில் "சிம்" பயன்படுத்தலாம், எவ்வளவு வேகம்!.
உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையினை பயன்படுத்த மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறது, மறுபக்கம் மத்தியரசு வலிய வலிய அரசுத்திட்டங்களில் இதனை உள்ளீடு செய்ய பணிக்கிறது. அத்தனை திட்டங்களையும் முறைப்படுத்த முனைவதாக அரசை எண்ணும் பொழுதில் மேற்கொண்ட சிறு உதாரணம் வழியாக மாபெரும் சீரழிவிற்கு விதை போடுவதாகவே கருதவேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஒன்றரை வருடப் போராட்டத்திற்குப் பிறகு (குடும்ப அட்டையை வாங்க பட்ட பாட்டினை சொன்னால் அது பெருங்கதை), கிடைத்ததை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் வேண்டுமாம். இப்போ நீ எடுத்துத்தானே ஆகணும் என்ற ரீதியில் சிலர் சிரிப்பது போல தோன்றியது. நிச்சயமாக பிரம்மையோ பிசாசோ அல்ல. இணையத்தில் விண்ணப்பிக்கலாமென்று துளாவியபோது படிவம் மட்டுமே சிக்கியது. இணையமாக்கலை இங்கிருந்தே தொடங்கியிருக்கலாம், இதிலேதும் சிக்கலிருக்குமானால் ஆதாரும் பெருஞ்சிக்கலாகவே இருக்க முடியும்?
நேற்று பல்லாவரம் அல்லது பல்லவபுரம் நகராட்சிக்கு சென்றபோது, குறுக்குமறுக்காக சிலர் நடமாடுகிறார்கள் நம் காதுகளுக்கு கேட்குமட்டும் "ஆதார் அப்ளையா....ஆதார் அப்ளையா...." என்று ஆட்டோ வேணுமா எனக் கேட்பவரைப் போல விசாரிக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் சென்று கேட்டதும் "ஐ.டி புரூப்லாம் வச்சிருக்கியா.... மூணுமாசத்துல வாங்குறியா உடனே வேணுமா" என்றார். உடனே என்றால் எப்படி என வினாவவும் சிரித்தார் அருகிலிருப்பவரைப் பார்த்து. அங்கிருந்து விலகி வெளியிலிருந்த கடையில் படிவம் இருபது ரூபாய்க்கு வாங்கும்போது, ஒருவர் ஒரு பெண்ணை அழைத்துவந்து "இவங்ககிட்ட எரணூறு ரூவாக்குடு நாளைக்கே முடிச்சிவிடும்" என்றார். (அவரின் சிரிப்பிற்கான பதில் வெளிப்படையாக இங்கே) இணையமயமாக்கலின் அடிப்படையே ஊழலில்தான் துவக்கம் கொள்கிறது.
இப்பொழுது சில கேள்விகள். தீவிரவாதமில்லா இந்தியா? இணையமயமான இந்தியா? பணமற்ற பரிவர்த்தனை பொருளாதாரம்?
ஊழலற்ற இந்தியா?
பதில் உங்களிடம்.
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015
நவீனநகரமெனும் உலகமகா புழுகல்
நகரத்து சுவர்கள் அனைத்திலும் "நவீன நகரம் தந்த நமோவே அம்மாவே" என்றும் இன்னபிற அரசியல் வியாதிகளை, சினிமா போலி புரட்சியாளனை தாங்கி ஒட்டிக்கொண்டிருக்கும் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தடை உருவாகுமா? அதற்கு சாத்தியமுண்டா நவீன நகரத்தில்?







