இன்று காலை எழுந்ததும் சாரல் பொசுங்கி தெரு மெல்ல தன் மீது நீர் மொட்டுக்களை கோலத்தின் புள்ளியாக்கி பரப்பியிருந்தது பார்வையில் விழவும் வெளியே செல்ல மனமின்றி வாசிக்கலாம் என மூன்றாவது வரியில் இருந்தபோது மூடிவிட்டு நடக்கப் போய்விட்டு வந்ததும் ஒரு கையளவுள்ள வரைவுத்தாளில் எதிரேயிருக்கும் புங்க மரத்தைக் கண்டேன்.
திங்கள், 8 ஆகஸ்ட், 2022
தொடர் வரைவு ஆறு
திங்கள், 17 மே, 2021
ஒளிநிழலின் மாயம்
மொத்தம் ஆறு மணி நேரம், மூன்று நாளாக மெல்ல மெல்ல சிக்கிய பொழுதில் வரைந்து முடித்தேன் இந்த வாரத்திற்கான ஓவியர் ரெம்ப்ரான்டினுடைய தன்னுருவப் படம். எந்த வண்ணம் பயன்படுத்துவது என்ற குழப்பம் இருந்து கொண்டேயிருந்தது, நீர் வண்ணமா, எண்ணெய் வண்ணமா, அக்ரிலிக் வண்ணமா என்ற பெரும் யோசனைக்குப் பின் அக்ரிலிக் பயன்படுத்தலாம் என்ற முடிவில் ஏற்கனவே வெள்ளை ப்ரைமர் அடித்து தயாரக வைத்திருந்த பெரிய அளவு கெட்டி அட்டைத் தாளில் அடிப்படை கோடுகளை வரைந்ததும், சிவப்பில் வெள்ளை கலந்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தை துரத்தியடித்தது அப்படியொரு கலவையை பூசத் தொடங்கியதும், பிறகு தான் மஞ்சளை வெள்ளையுடன் கலந்து பரப்பினால் ஓரளவு ஏற்கக்கூடிய வண்ணத்தை காண முடிந்தது, இப்போது வைத்திருக்கும் பன்னிரண்டு வகை சிறுசிறு வண்ணக் குழல்கள் போதாது, முதன்மை வண்ணங்கள் அதிகமாக தேவை என்பதை. உணர்த்தியது.
பதினேழாம் நூற்றாண்டின் முக்கிய ஓவியர்களில் ஹாலந்தைச் சேர்ந்த ரெம்ப்ரான்ட் மிகவும் கவனிக்கத் தக்கவர், இவரது ஒளி நிழல் சார்ந்த உருவப்படங்களை மேலோட்டமாகக் காண்கையில் குறிப்பிட்ட வண்ணங்களுக்குள் அடக்கிவிடும் கண்கள் அதை நெருங்கி அணுகும் போது, இவரது தூரிகையின் தீற்றல் காட்டும் வண்ணங்களை கண்டு மனம் பூரிப்படையச் செய்கிறது. மனிதர்களை அவர்கள் சார்ந்த சூழல்களை வரைவதை விரும்பிச் செய்தவர்.
இவரது வாழ்வையும் படைப்புருவாக்கத்தையும் திரைப்படமாகக் காண கீழுள்ள தொடுப்பில் சென்று காணலாம்.
https://archive.org/details/Rembrandt
ரெம்ரான்ட் பற்றி சிறு காணொளிகள் தொகுப்பு



