செவ்வாய், 6 அக்டோபர், 2020

ஐயமடைகிறேன்

விரும்பி ஆற ஆற திளைத்து வாசித்து சுகப்பட்ட நாட்களாக சமீபத்திய பொழுதுகள் இல்லை, இன்றிலிருந்தேனும் ரகசியமாகவும் சினேகத்துடனும் சில வரிகளை சன்னமாக மனச் சன்னலுக்குள் செலுத்திவிட எண்ணி வண்ணதாசனிடம் சென்றேன், உறக்கம் பிடிக்குமா என ஐயமடைகிறேன் இவ்வரிகளின் பூவரசம்பூக் குரல் கேட்டு