வியாழன், 22 டிசம்பர், 2016

மன்றோவின் உயர்ந்த சிலை

தீவுத்திடலை எட்டி நின்றுகூட பார்த்ததில்லை சென்னை வந்த நான்கரை வருடத்தில், இந்த வருடம் ஜூலை மாதம் நிகழ்ந்த புத்தகத்திருவிழா அதற்கான வழியினை திறந்துவிட்டது. திடலுக்கும் அதன் மற்றொரு பகுதியிலுமிருந்த மரப்பாலம் உடைந்து போனது ஒருபக்கம். முதலில் போகும் பொழுது மெரினா வழியாக சென்று இருட்டியபின்னர் அதே பாதையில் சென்றுவிட்டேன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கூட்டத்தின் இடையிலேயே எழுந்துகொண்டு. மற்றொரு பக்கமான அண்ணாசாலை நோக்கி வரவில்லை.

அன்று பார்த்த மரப்பாச்சி பொம்மையை வாங்கவேண்டுமென்று மற்றொரு ஞாயிறு மதியத்தில் செல்ல நேர்ந்தது. பெரியார் பாலத்தருகே இறங்கி நடந்தபோது அந்த சாலையின் அமைதி, அதாவது வாகனங்களில் மக்கள் போகவும் வரவும் செய்கிறார்கள் ஆனால் நடைபாதையில் யாருமில்லா அமைதி. சாலையின் நடுவே பிரமாண்டமான குதிரையின் மீதமர்ந்த மனித உருவச்சிலை. நீச்சயம் ஏதோவொரு ஆங்கிலேயன் என எண்ணிக்கொண்டு சற்று முன் சென்று கவனித்தேன் அல்லது அதன் உயரத்தில் வியந்து நின்றேன்.

சர் தாமஸ் மன்றோ. இதென்ன நகரின் மையச்சாலையில் ஒரு ஆங்கிலேயனின் சிலை என ஏளனப் பெருமூச்சில் நகர்ந்துகொண்டிருந்தவன் அப்படியென்ன இந்த ஆள் செய்தான், கொள்ளையடித்தவனுக்கு கோபுர உயர சிலையா. அதுவும் பராமரிப்பில் காந்தி நேரு காமராசர்களெல்லாம் ஒன்றுமில்லை என எண்ணியதோடு மன்றோவை அறிந்துகொள்ள வேண்டுமெனவும் புழுங்கியது, வாசிப்பிற்கு பின் புழுக்கம் குறையவும் மிகவும் செய்யலாம்.

அட இன்று எதேச்சையாக பாவண்ணனின் பக்கங்களை புரட்டினால் வந்து நிற்கிறது கீழுள்ள இணைப்பு. வாசித்துப்பாருங்கள். ஒரு புத்தக அறிமுகம் காத்திருக்கிறது.

http://writerpaavannan.blogspot.in/2016/11/blog-post_20.html?m=1

கருத்துகள் இல்லை: