செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிக்பாஸும் நான்குகாலிகளும் (நாற்காலி)

அலுவலக தோழி ஒருவர் மதிய இடைவேளையின் பொழுதில் அரசியல் பற்றிய பேச்சு வந்தபோது ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசியேயில்லை என்றாள். நண்பரொருவன் அதற்கு அவர் ஒரு "சொல்புத்தி" பிள்ளை என எண்ணுகிறேன் என்றான். அதை ஆமோதித்தது போல அவளும் தலையாட்டி உச்சி கொட்டினாள்.

பிக்பாஸ் பற்றிய பேச்சு வந்ததும் தீவிரமான குரலில் இன்னொரு நண்பன் கமலுக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்ப்பதாகவும் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றான். அதை மறுதலித்து அவர் வரமாட்டார் என்றான் ஸ்டாலினை சொல்புத்தி என்று சொன்னவன். அதெப்படி நிச்சயமாக வருவார் என்று நெஞ்சு புடைக்க கத்தினான் என்றே சொல்ல வேண்டும்.

மூன்று நாள் கழித்து முரசொலி பவளவிழா முடிந்த மறுநாள் மாலையில் சாலையோர பெட்டிக்கடையில் நான் ஃகாபியும் மற்றவர்கள் இஞ்சி தேனீரோடு புகைக்குழலையும் உறிஞ்சிக்கொண்டிருக்கும் போது அதே தீவிரமான குரலில் சொன்னாலும் வெட்டவெளி என்பதால் குறைவான ஓசையிலேயே காதில் விழுந்தது "கமல் அரசியலுக்கு வருவார் ... வரவில்லை என்றாலும் யாருக்காவது வழிகாட்டுவார்" என ஒலித்து முடித்தான். 

அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது என்றான் அந்த சொல்புத்தி என்று சொன்னவன். ஏன் நடக்காது அக்காலத்திலேயை கலைஞர் கமலை அரசியலுக்கு அழைத்திருக்கிறார் தெரியுமா. ஆனாலும் அவர் போகவில்லை பதிலும் சொல்லவில்லை என்றும் சொன்னான்.

கலைஞர் கூப்பிட்டே வராத கமல் மற்ற யார் கூப்பிட்டும் வரமாட்டேன் எனக் கூறியதான உள் அர்த்ததில் தான் இதை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் திமுக ஆட்சியில் அமர்ந்தால் விஸ்வரூபம் இரண்டாவது பாகத்தையும் வெளியிட்டு மற்றைய படங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார் என்றான். ஆமாம் ஸ்டாலுனுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போனால் என்னாகும் என்றான் இன்னொருவன்.

1 கருத்து:

ராஜி சொன்னது…

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்... நமக்கு ஒரு யூசும் இல்ல