வெள்ளி, 7 நவம்பர், 2014

நகரத்து காலை

முகில்கள் அற்ற தெளிவான வானில்
இதுகாறும் மறையா முழுநிலவு
அதையொட்டி சிறகு விரித்த கரும்புறா
வாகன இரைச்சலில் தேம்பி அழும் குளிர் தென்றல்
தெளிவற்ற மனநிலையில் போக்குவரத்து சமிக்ஞை
பிறந்த குழந்தையின் பிசுபிசுப்பு இவன் கைகளில்
முழுமைபெற காத்திருக்கும்  நகரத்து காலை

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நகரத்து வர்ணனை அருமை நண்பரே....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!