வெள்ளி, 28 அக்டோபர், 2016

மௌனியின் கதைகள்

மௌனியின் படைப்புகளுக்குள் ஊர்ந்து கொண்டிருக்கிறேன். காலச்சுவடு வெளியிட்டிருக்கும் அவரின் முழுத்தொகுப்பு. காதல் சாலை என்றொரு சிறுகதை, மூன்று பொழுதுகளாக பிரிந்த கதை வடிவம்.

அன்றையதினம் அவன் இளைப்பாற ஆலமரத்து நிழல் ஒதுங்கும்போது அவள் தொங்கிக்கொண்டிருக்கும் பிம்பம் மனதை அலைக்கழிக்கவும் எழுந்து விழுதுகளை உதறித்தள்ளி நகர்கிறான்.

இரவு அவனுக்கு இரவாக கழிகிறது.

முந்தையதினம் காதலைத் தேடி அலைகிறான். வழியில் நாயும் குருவியும் ஏளனம் செய்கிறது செய்வதுபோல் ஓர் மனவோட்டம். முள் குத்துகிறது மீண்டும் குத்துகிறது நடக்கிறான். கூடைக்காரியிடமும் தண்ணீர் எடுக்கப்போகும் பெண்ணின் சிரிப்பிலும் தேடாமல் தேடுகிறான். காதல். இடையில்  சந்திக்கும் ஒருவனை அவளின் அழகை கூறிய பிற்பாடு சேர்த்துக்கொண்டு நகர்கிறார்கள் ஒரு வீட்டை அடைகிறார்கள். வீட்டுக்குள் எரியும் விளக்கு அவ்வீட்டின் ஏழ்மையை வெளிப்படுத்தும் விதமாக எறிகிறதென்கிறார் கதையாசிரியர். கவிதை அவ்விடம்.

இவனுக்கு காதல் வருகிறது. எப்படி? எங்கே? எதுபோல? இவனுக்கு புரியவில்லை.

அவள் நிற்பதுவும் தீப ஒளியில் நிழலை அளந்து சொல்வதும், ஓவியனின் கைவேலை. இவன் அவளோடு தங்குகிறான் தூங்குகிறான், இடையிடையே புலம்புகிறான் விழித்திருக்கும் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை.

அவனும் இவனும் கிணற்றடியில் பேசிவிட்டு அவளை எதிர்பார்த்து வராமல் போக, கொல்லைப் பக்கம் போகிறார்கள். அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று ஓரிரு வார்த்தையில் சொல்லிப்போவதில் என்ன இருக்கிறது. அதற்கான அடையாளங்களை வடித்திருக்கிறார் எழுத்துக்களில்.

உணர்ந்தானா காதலை பதிலாக ஆகாயம் நோக்கி இருகையும் நீள்கிறது. இரவுக்குப்பிறகு காலையில்லை அவனுக்கு.

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

படிக்க தூண்டும் ஆவல் மேலிடுகிறது தங்களது அறிமுகத்தில்...

Yarlpavanan சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துகள்