புதன், 23 நவம்பர், 2016

ஓவியங்களை வாசித்தல்

எம்.எஃப்.உசேனின் வரலாற்று நூல் (ஓவியர் புகழேந்தி எழுதியது) வாசித்த போது அவரது பிறப்பு முதல் இறுதிவரையில் அவரின் படைப்புகள் உருவானதன் பின்னணியையும் எவ்விதமான விளைவுகள் அவரது ஓவியங்களில் வெளிப்பட்டன என்பதனையும் விரிவாகச் சொல்லியிருந்தார். இங்கு மேற்கத்திய ஓவிய பாணியை பின்பற்றி பெரும்பாலானோர் வரைகையில், இந்திய ஓவியங்கள் உருவமற்று இருக்கவே முடியாது என்ற வரையறைக்குள் ஓவியத்தினை வரைந்ததாக படித்த ஞாபகம்.

இன்று சி.சிவராமமூர்த்தி எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்திய ஓவியம் என்ற புத்தகம் வாசித்து முடித்துவிட்டேன் ஒருவழியாக!.

ஓவிய நூல்கள், ஓவியன், காட்சிக்கூடங்கள், திறனாய்வு விதிகளென துவங்கியவர் தொடர்ந்து கி.மு2-ம் நூற்றாண்டிலிருந்து சமகாலத்துவரையிலான ஓவியக்கலையின் வளர்ச்சி ஆட்சிகள் மாற மாற ஒன்றிலிருந்து மற்றொன்று கலையை உள்வாங்கி பரிணாமம் பெற்றதை குறிப்பிட்ட காலகட்டத்தை வைத்து விளக்கியிருக்கிறார் சாதவாகனாரில் துவங்கி சமகாலம் வரை.

மேற்கத்திய கலைப்பண்புகளான பதிவு நவிற்சி (Impressionist), எதிர்மறை நவிற்சி (Futurist), கோணவடிவு நவிற்சி (Cubist), அடிமன கனவு இயல்பு நவிற்சி (Surrealist) ஆகியவற்றால் ஓவியர்கள் மரபிலிருந்து விலகி பிழைப்புவாதிகளாகிவிட்டதாக கவலையுறுகிறார்.

இன்னும் ஓவியம் பற்றிய நூல்களை தேடிக்கொண்டிருக்கிறேன், நூல்கள் பரிந்துரை செய்யுங்கள் அன்பர்களே.

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

அருமையான தகவல்