ஞாயிறு, 12 டிசம்பர், 2021

இரு கண்கள்

நேற்றைய வகுப்பில் எதிர்பாராத விதமாக ஒரு கருப்பு வெள்ளையில் பெண் ஓவியம் வரைய பயிற்சி சொல்லித் தரத் தொடங்கினார் ஆசான். காலதாமதமாக இணைந்ததால் வேக வேகமாக கருப்பு மசியினால் அளவுகளை குறித்துவிட்டு அவரைப் பின் தொடர வேண்டியிருந்தது. சமயத்தில் நம்மையும் அறியாமல் கீறப்படும் கோடுகள் சற்று சிறப்பாகவே வந்துவிடுவதுண்டு. ஓரளவு திருப்தி தரக்கூடிய அளவுகளை குறித்திருந்ததால் அடுத்து ஒளி நிழல் பிரிக்க அவ்வளவு கடினம் தெரியவில்லை, இருந்தாலும் படத்தின் சிறு பகுதியை வரைய இடமில்லாமல் போனது வருத்தம். இருப்பதை ஒழுங்காக்கிக் கொள்வது என்ற எண்ணத்தில் தொடர்ந்ததும் அவரோடு சேர்ந்தே வரைய முடிந்தது.



              நேற்று அவர் கூறியதற்கிணங்க பின்புலத்தில் என்ன வரையலாம் என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கோயில் தூண், படிக்கட்டு, செடி என கட்டங்கள் விரிந்தாலும் வெறுமனே இலைகளை தீட்டி பின் இரு செம்பருத்திப் பூவினை வரைந்து விடலாம் என்று மதியம் அமர்ந்து முடித்ததும். அடுத்ததாக கண் மூக்கு வாய் இவற்றையெல்லாம் தனித்தனியாக வரைந்து பழக வேண்டுமெனெத்  தோன்றியது, அடுத்த வாரத்தில் இதைச் செய்து பார்க்க வேண்டும்.



இது தவிர நோக்கு முறையில் எதையேனும் செய்தாக வேண்டும் என்பதில் இந்த வாரம் எனது கையை அக்ரிலிக் வண்ணத்தில் வரைந்து பார்த்தது கீழே.


கருத்துகள் இல்லை: