சனி, 22 ஜூலை, 2023

நூலகத்தில்

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் அண்ணா நூலகம் சென்று ஓவியம் சார்ந்த புத்தகங்களை வாசிக்க வாய்த்தது தொடர்ந்து செல்வதற்கு விருப்பமிருந்தாலும் குன்றத்தூரிலிருந்து கருத்த பாம்பு போல சாலை நீண்டு நேரம் பல்லிளிக்கிறது.

எழுத்தாளர் பாவண்ணன் அவருடைய கனடா இயல் விருது பயணம் பற்றியும், கோடைகாலம் முடிந்து பருவமழை தொடங்குவதை எப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை இலக்கியங்களில் பதிவு செய்திருப்பதை சிறப்பாக எழுதியிருந்த போகன் சங்கரையும் கறுப்பர் நகரம் புதினம் உருவானதன் பின்னணி உணர்வுகளை பகிர்ந்திருந்த கரன் கார்க்கியின் எழுத்தையும் அந்திமழை இதழில் வாசிக்க குன்றத்தூர் நூலகம் சென்று வந்தது நிறைவாக இருந்தது. 

நூலகத்தில் கண்ட இந்து நாளிதழ் வெளியிடும் "young world" சிறார் ஆங்கிலப் பத்திரிக்கையில் வந்த காமிக் கதைகள் வாசிப்பு ஆர்வத்தை தூண்டுகிறது. தமிழில் சிறுவர்களுக்கான சித்திரக்கதைகள் உருவாக்கப்படுகிறதா.

கருத்துகள் இல்லை: