வியாழன், 29 ஆகஸ்ட், 2024

ஓவியக் கண்காட்சி - Art infinity

சென்னையில் ஓவியம் சார்ந்து இயங்கக்கூடிய எவருக்கும் பரிச்சயமானது லலித் கலா அகாடமி. வார நாட்களில் எப்போதும் அங்கே கலைஞர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கள் சிந்தனைகளுக்கு புற வடிவம் உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படும் ஓவியர்கள் பலரையும் கண்டு உரையாட இயலும். 

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கண்காட்சிக் கூடத்தில் இந்த ஆண்டு தொடர்ச்சியாக பல ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய "Art Infinity" என்ற ஓவியக் கண்காட்சியில் எழுபது ஓவியர்களின் கலைப் படைப்புகள் காட்சிக்கு விருந்தாகிறது. கலவையான பல வகைப்பட்ட யதார்த்தம் முதல் அரூப ஓவியங்கள் வரை கண்களுக்கும் மனத்திற்கும் இன்பத்தையும் மனித இயக்கத்திற்கு உந்துதலாகவும் விளங்கும் படைப்புகள். நண்பர்கள் வாய்ப்பிருந்தால் கண்டுகளிக்கலாம்.

















கருத்துகள் இல்லை: