ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

அணைத்துக் கொண்ட முகம்

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலையில் மதனந்தபுரம் சுற்றியுள்ள பூங்காக்களில் மனித முகங்களை பார்த்து வரைந்து கொடுப்பது எனது வழக்கம். எங்களது ஓவிய மாஸ்டர் நடத்தும் ஓவிய வகுப்பிற்காக (SARAA ART CLASS) வரைவதனால் இதற்கென்று கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. 

நேற்றொரு பூங்காவில் சிறுவன் ஒருவன் வரைவதற்காக அமரும் முன், இவன் ஒழுங்கா உக்காருவானான்னு தெரியல எனச் சொல்லிக் கொண்டே உட்கார்ந்தார் அவனது அப்பா. ஒரு இடம் பாராமல் அவனது உடலும் பார்வையும் துடித்துக் கொண்டிருந்தது, எப்படியோ வரைந்து முடித்து விட்டேன். அவனிடம் கொடுத்ததும் அருகில் வந்து உங்களை ஒரு முறை "hug" பண்ணிக்கட்டுமா என்று கேட்டதும் அணைத்துக் கொண்டேன்.

அவனை படம் பிடிக்காமல் விட்டுவிட்டேன்.
இப்படம் மற்றும் காணொளிஅதற்கு முந்தைய வாரங்களில் வேறு பூங்காவில் வரைந்த போது எடுத்தது.






கருத்துகள் இல்லை: