சனி, 27 டிசம்பர், 2025

நற்கீறல் - வெளியை வரைதல்

இந்த கிழமை நற்கீறல் ஓவியக் குழுவுடன் நேற்று காலையில் கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோவிலின் வெளிப்புறத்தை வரைந்து பழகினோம்.




இடத்திற்கு சென்று சேர்வதற்கு பத்தரை மணி ஆகிவிட்டது குழந்தைகளை நாடகப் பயிற்சிக்காக பள்ளியில் விடுவதற்குச் சென்றதால் மேலும் மௌலிவாக்கம் பாய்கடை நிறுத்தம் அருகே சாலையோரமுள்ள கடைகளை அரசு இடித்துத்தள்ளும் வேலையில் மும்முரமாக இருந்ததால் போக்குவரத்து நெருக்கடி வேறு அதனால் ஓரளவு தான் வரைவதற்கு இயன்றது. 

சென்ற கிழமை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலுக்கு சென்ற போது அங்குள்ள மண்டபத்தின் தூண்களும் அதில் உள்ள குதிரையும் குதிரை வீரனும் படிக்கட்டுகளும் அழகாக இருந்தது ஆனால் அவற்றை விட்டுவிட்டு மண்டபத்திற்கு மேலிருந்த தற்காலத்தில் உருவாக்கப்பட்ட வண்ணம் பூசிய சிலைகளையும் கட்டமைப்புகளையும் வரை தொடங்கி விட்டேன் பின் அதனை முடித்துவிட்டு கீழே மண்டபத்தை வரைய வரும்போது கோவில் கதவுகளை மூடுவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதை பிழையாக உணர்ந்து கொண்டே வீடடைந்தேன். ஆனால் ஒவ்வொரு இடத்தையும் வரைவதை சோதனை அடிப்படையில் கற்றுக் கொள்வதற்கு இணங்கி தொடர்கிறேன்.

கருத்துகள் இல்லை: