வியாழன், 29 டிசம்பர், 2016

பைத்தியம் என்றுகூட சொல்லலாம்

கடந்த சனிக்கிழமை பெரியப்பா ஊரிலிருந்து வந்திருந்தார். அதிமுக தீவிரத்தொண்டர். அக்காள் வீட்டில் நடந்த நிகழ்வை முடித்துவிட்டு மாலையில் மெரினாவை நோக்கி சென்றிருக்கிறார், என் மனைவி, அம்மா, இரண்டு அக்காள்கள் மற்றும் அத்தான்களோடு. அன்று எனக்கு பிறந்தநாளாகையால் என்னைப்பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

மனைவியிடம் அக்கா கேட்டிருக்கிறாள் "தம்பி பிறந்தநாளுக்கு என்ன வாங்கிக்குடுத்தடே" உடனே இவள் "ஒங்க தம்பிக்கு புத்தகந்தான் வாங்கிக்கொடுக்கணும்".

"அவன் புத்தகத்த வாசிச்சா பரவாயில்ல, ஆனா அடிமையாயிட்டான்" என்றிருக்கிறாள் அக்கா.

ஜெயலலிதா சமாதியில் கொடுத்த சப்பாத்தியையும் பொங்கலையும் விழுங்கி தண்ணீர் குடித்துவிட்டு இரவில் வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அடுத்தவருடம் என்னை பைத்தியம் என்றுகூட சொல்லலாம், ஆனால் யார் சமாதியை பார்க்கப்போவார்கள் என்று என்னால் கூற இயலாது.

2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…


அருமையான பதிவு

Pandiaraj Jebarathinam சொன்னது…

வருகைக்கு நன்றி :-)