வியாழன், 16 நவம்பர், 2017

இரண்டு சிறுகதை - வாசிப்பு

இன்று வாசித்த இரண்டு சிறுகதையும் பள்ளிப்பருவ காலத்தை நினைவில் கிளர்த்திவிட்டது.

பிரைமரி காம்ளக்ஸ்
https://padhaakai.com/2017/08/27/primary-complex/

ஒரு சிறுவனின் நினைவோட்டத்தில் சொல்லப்படும் கதையேயானாலும் அதுமட்டும் போதுமா நினைவுகளுக்கு தலை சீவி விட. உடல்நிலை சரியில்லாமல் போனால் வீட்டில் கிடைக்கும் உபசரிப்பும் (பகலில் ரொட்டியும் பாலும் இரவில் தொட்டுக்க சீனியோடு இட்டிலியும்) மூன்று வேளை சோறுண்ணுவதிலிருந்து விடுதலையும், முட்டையின் மஞ்சள் கருவை சோற்றில் பிசைந்து சாப்பிடுவது வியாழக்கிழமை பள்ளியில் கிடைக்கும் முட்டை என நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டே வாசித்து முடித்தேன்.

இதோ எனது சரீரம்

இம்மாத தடம் இதழில் வெளி வந்திருக்கும் சிறுகதை.
ஓவியங்களையும் ஓவியரையும் புகலிடத்து அகதியையும் பற்றிய கதைதேயானாலும் அதில் வரும் இடைவார் என்ற சொல் இழுத்துப்போன தூரம் அகவயமானது. அவ்வார்த்தைக்குப்பின் "இடவாரக் காணோம், இடவார எங்கம்ம, இடவார எங்க வச்சேன்" என்று திரும்பத்திரும்ப எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். அதிலிருந்து எவ்வளவு தொலைவு அந்நியப்பட்டுவிட்டேன் என எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: