திங்கள், 18 ஏப்ரல், 2022

ஆளில்லா காடு

ஆள் அரவமில்லா காட்டுக்குள்ளே
சருகு ஒண்ணு முணுமுணுத்துச்சாம்
யாருடே அதுன்னு
பதிலொலிக்க ஆளில்லாம
பரிதவிச்சிக் கெடந்தத
காலொண்ணு மிதிச்சிப் போனதாம்
மிதிச்ச காலுக்கு
கண்ணில்லயாக்கும்னு கேக்கத்தான்
தெசையில்ல
லெக்கு தெரியாம பறந்து வந்த
பச்சயெலையொண்ணு
காம்போரமா கண்ணீர
ஊத்துதாம்
ஒக்கிட ஆளில்லாம
ஓஞ்ச மரத்துல
ஒடிஞ்ச இலை நான்னு
ஒப்பாரி வச்சிதாம்
ஒலுங்கொண்ணு
ஒய்யாரமா இலைய
பாத்துக் கேக்காம்
இரத்தமுள்ள ஆளில்லயாக்கும்னு 

கருத்துகள் இல்லை: