திங்கள், 12 ஜூன், 2023

துள்ளியோடும் நதி

எனக்கான தேடலுக்கான பாதையை எழுத்தில் கண்டு இன்று ஓவியங்களில் தொற்றிக் கொண்டு பயணிக்கிறேன், ஓவியம் வரைதலிலும் அதைப்பற்றிய வாசிப்பிலும் முயன்று அறிய முற்பட்டாலும் பணிச் சூழல் அதிக பொழுதையும் அதற்கான ஓய்வு என்று சில பொழுதையும் உட்கொண்டு விடுவதால் சுய தேடலில் கரைந்து போக மனம் பொருந்தி வருவதில்லை, ஐந்து வருடமாக தீவிர மனோபாவத்தில் தான் ஓவியம் சார்ந்து இயங்க முற்படுகிறேன் ஆனாலும் இலக்கு என்று எதையும் நோக்காமல் நீண்டதொரு பயணமாகவே இதனை பார்க்க எண்ணுவதாலோ என்னவோ அவ்வப்போது கொஞ்சம் இடைவெளி உருவாகிவிடுகிறது, என்னால் எழுதவோ வரையவோ மட்டுமே இயலுமென்பதை உணர்த்தியிருக்கிறது இப்பயணம், ஒவ்வொரு திசையிலிருந்தும் பெறப்படும் அல்லது திணிப்புக்குள்ளாகும் சிந்தனைகளில் எது எனதானது என்பதை கண்டடைவதில் பெருங் குழப்பம் எப்போதுமே இருக்கும், எனக்கான தேடல் எங்கே தேங்கியிருக்கிறது அது எதில் தொடரவேண்டுமென எண்ணற்ற கேள்விகள் எழும், அத்தனை கேள்விகளுமே எதையாவது செய் என்பதில் கொண்டு வந்து நிறுத்தும், இப்படி எதையாவது என்ற போக்கு பெருங்குழப்ப நிலைக்கு ஆட்படுத்துகிறது, திடீரென கிழக்கு பின் வடக்கு அடுத்த நாள் மேற்கு சில மணி நேரத்தில் மேற்கு என திசையறியா பறவை போல மனம் முட்டி மோதும் எதற்கும் முகம் கொடுக்க மறுக்கும்

கருத்துகள் இல்லை: