திங்கள், 15 ஏப்ரல், 2024

வடியத் தொடங்கியது

கிளியின் சொல்லில்
கிளியில்லை 
எங்கிருந்து வந்ததென்று 
திசை பார்க்கத் தோதற்ற நொடியில் 
இன்னொன்று இணைய
விருட்டென்று சாய்ந்து பறந்தன

தென்னை போல் 
ஓலை பெற்ற மரத்தின் 
குருத்தோலை நுனியிலிருந்து
வானம் வடியத் தொடங்கியது 


கருத்துகள் இல்லை: