ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

மாயம்

சில ஓவியங்கள் பார்வையாளனின் கவனத்தை ஈர்த்ததும் திசை திருப்பிப் போக விடாமல் அதனுள் பயணிக்க வைக்கும். 
பாதையா அடுக்குமாடியின் சிதைந்த படிக்கட்டுகளா என்ற எண்ண ஓட்டத்திற்கு அப்பால் அங்கங்கே முட்டி நிற்கும் சுவர்களைக் கண்டு வழி தேடித் திரியும் கண்கள் சில வண்ணங்களில் களித்து நெருடல் காணாத கோடுகளில் சறுக்கி பாதாளத்தில் விழுந்து பின் சிதைவுற்ற சொற்கள் சிலவற்றைக் கொறிக்கிறது.

ஓவியர் அமல் மோகன் வரைந்த இந்த ஓவியம் முகநூலில் அவரது பக்கத்தில் காணக்கிடைத்ததும் அது மீட்டிய ஒலிகளுக்கு வெகு நேரம் செவி சாய்த்திருந்தேன், கவிதை வாசிப்புப் போலிருந்தது.




கருத்துகள் இல்லை: