சனி, 4 அக்டோபர், 2014

இன்றும் ஒருநாள் அவ்வளவே

மஞ்சள்நீர் தெளிக்கப்பட்ட
கடையின் முன்வாசல்
நீரை உறுஞ்சும் காக்கை
அழைத்துக் கொண்டது
தன் உறவுளை
தென்னங்கீற்றில்
பரவிக் கிடக்கும்
சிகப்புமஞ்சள் சூரியனின்
கீற்றுகள்
அலைபேசியின் அழைப்பில்
அகச்சிணுங்கல்கள்
இவைகளுக்கிடையே
அழிக்கப்பட்ட குயில்களின்
கேட்காத ஓசைகள்
இன்றும்
உண்டியாக நெகிழிப்பைகளை
உண்ணும் இந்த மாடுகள்

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


இந்தநாள் கலர்ஃபுல் நாளே,,,

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை!