திங்கள், 16 மே, 2016

கோடுகளோடு

பழைய குற்றாலம். ஊருக்கு சென்றால் பெரும்பாலும் சென்று வரும் மலையும் காற்றின் குளுமையும் நிரம்பியிருக்கும் வனம். எழில்.


மேகங்களின் மீது பேரன்பும் அவற்றை கோடுகளாகவும் வண்ணங்களாகவும் வரைந்து மகிழ மிகையார்வமும் சோம்பலும் கொண்டவன். ஒருவழியில் மலைகளின் மேல் பரப்பிய மேகக்கோடுகள் அதற்கான தொடக்கமாகவும், சோம்பலின் முடிவாகவும் இருந்துவிட எண்ணுகிறேன்.


0 0 0 0


பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை கடக்கும் தினம்தோறும் இப்பறவை கண்ணில் தோன்றாமல் பறந்ததில்லை. வெடித்துப் பிளந்து கிடக்கும் சதுப்புநில தரையின் மறுபகுதி (கட்டிடங்களிருப்பதால்) சற்று நீரிருக்கும் பகுதியில் பார்க்கலாம். நண்பன் ஜெபராஜ் ஒளிப்படக்கருவியில் பதிவு செய்ததை காகிதத்தில் கரிக்கோல் கோடுகளாக தீட்டி ஆசுவாசம் அடைந்திருக்கிறேன் சிறகு விரித்து நிற்கும் அப்பறவை போலவே.

கருத்துகள் இல்லை: