வியாழன், 13 மார்ச், 2025

செயற்கையின் ஈரமின்மை

இந்து தமிழ் நாளிதழில் வியாழக்கிழமை தோறும் எழுத்தாளர் கலாப்ரியா எழுதும் பாற்கடல் தொடர் வாசிப்பிற்கு இனியதும் அன்புமானது.

இத்தொடருக்காக பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவின் ஓவியங்கள் எப்போதும் முகம் சுழிக்க வைக்கும். இன்று வெளியான "வாசனை தாத்தா" கட்டுரைக்கு அச்சிடப்பட்டிருக்கும் படம் கழுத்தை அறுப்பது போலுள்ளது.

இறக்கும் தருவாயில் உள்ள முதியவருக்கு எந்த ஊரில் இப்படி வாயில் நீரூற்றுவார்கள் என்று விளங்கவில்லை. இப்படியொரு காட்சியை கண்டிருக்காத சிலர் இந்த கட்டுரை வாசிப்பிற்கு படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறான புரிதலுக்கு வழிவகுக்குமா இல்லையா. பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது பத்திரிக்கை மற்றும் எழுத்தாளரின் அடிப்படை அறம் என்பதனை இவர்கள் உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை: