திங்கள், 24 மார்ச், 2025

அக்கா குருவி 18

ராசபாளையத்தில் 
தொடரியின் முகம் பார்த்திருந்தேன் 
"தென்காசி ஆ"
என்றது வடக்கத்திய குரல் 
"வரும் 
சங்கரங்கோயில் கடயநல்லூர் தாண்டி" 
என்றது தெக்கத்திக் குரல் 
இரவு 
நெருப்பை கையிலேந்த தொடங்கியது 

கருத்துகள் இல்லை: