செவ்வாய், 18 மார்ச், 2014

சிநேகிதனின் சிலாகிப்பு ..!

கையில் எறும்பு
ஊர்ந்து போகிறது
அது எங்கே
சென்று கொண்டிருக்கிறதோ !

பால்ய பருவத்தில்
எறும்பை கண்டதும்
ஓங்கி மிதித்துச்
சாவடிப்பேன் இல்லையேல்
ஓலமிட்டு ஓட்டமெடுப்பேன் ..!

இன்றோ ..
கையில் ஊர்ந்து போகும்
எறும்பின் சுறுசுறுப்பை
குறுகுறுக்கும் உணர்வுடன்
ரசிக்கு மளவுக்கு
தேர்ந்து விட்டேன் ..!!

பட்டு விடும் தருணம்
கொண்ட மலர்ச் செடிக்கு
நீர் கிடைத்த ஒரு
சிலாகிப்பு போல்
இந்த எறும்பு ஊர்தலில் எனக்கும் !!

                                                                             -------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: