திங்கள், 3 மார்ச், 2014

சேதியும் மானிடமும்



நாளொரும் சேதியாய்
ஞாயிறும் திங்களும்
இன்ன பிற தினங்களும் ...
வெட்டும் குத்தும்
களவும் கற்பும்
கள்வரும் காதலும்
அரசியலும் பொய்யும்
காவலும் கதையும்
போலியும் ஆட்டமும்
வணிகமும் விளம்பரமும்
தாங்கியே நாளும்
பொழுதும் விடியும்
செய்தித் தாளுடன்

மாற்றுவோறு மில்லை
மாறுவோறு மில்லை
வையத்திலே
நலமும் அறமும்
வழி நடப்பாரு மில்லை
என் நாடே
தாய் திரு நாடே..!!

                                                                                      ------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: