வியாழன், 27 மார்ச், 2014

விளக்கொளியில் மஞ்சள் நிலா ..!!

ஆலமரக் கோவிலின்
முடிக்கப் படாத சுவரின்
சாளரத்தின்
ஓரமாய் ஒட்டி
ஒளிந் திருந்தேன்

வரிசையில்
அடுக்கி வைத்திருந்த
அகல் விளக்குகள்
ஆலமரக் காற்றில்
அங்கலாய்த் தன..

சனங்களின்
சலசலப்பை அழுந்திய
சருகை யுடையின்
சன்னமான ஒலி
செவி வழி விழுந்ததும்
சீராக்கினேன் பார்வையை ..

பச்சை நிறம்
கீழுடுத்தி
பாலாடை வண்ண
மேலாடை யில்
பச்சை மலர் உதிரிகள்
தூவப் பட்டிருந்தது...

விளக்கின்
சிவப்பு மஞ்ச லொளியில்
மறைந்து
வெள்ளி நிலா முகத்தில்
மஞ்சள் முலாம் பூச
எத்தனித்தேன்..!!

                                                                             -------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: