சனி, 8 மார்ச், 2014

மரமே ஓ மரமே !!


மரமே ஓ மரமே
வேர்களில் உதிரம் பரப்பி
பூக்களை கனிக ளாக்கும் மரமே!!

காய்க்கும் கனிகளை
உணவில் மருந்தாக்கும் மரமே!!

வான் தரும் மழைத்துளி
கொண்டே நின் இழை
தழை செழித்திடும் மரமே !!

உன் னுயிர் துறந்து
என் னுயிர் காக்கும் மரமே!!

என் னுயிர் மடிந்தாலும்
உன்னுயிர் பிரியா
வரம் வெண்டுவனென் மரமே!!

                            -------------------- ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: