சனி, 25 பிப்ரவரி, 2017

வன்முறையின் முகம்

2014-ல் தனி பிம்பமாக தன்னை முன்னிருத்தி மத்தியில் ஆட்சியை பிடித்து வாயால் வாள் சுழற்றும் மோடி எனும் பிம்பத்தின் விளைவால் ஏற்பட்ட சீரழிவினை வெளிப்படுத்தும் நூல் "சட்டப்படி நடந்த வன்முறைகள்".
2002 குஜராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலை சம்பவத்தின் சாட்சியாக உள்ளது இப்புத்தகம்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினால் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகும் முதலமைச்சர் மோடி, அடுத்த மூன்று நாட்களில் தன்னை இம்மக்கள் வணங்குவார்கள் எனக்கூறியதோடு நிற்காமல் அடுத்த மூன்று நாளில் இஸ்லாமியர்களை அழித்தொழிக்கும் கலவரத்தினை தூண்டியிருக்கிறார், அதற்காக ரயிலில் எரிந்துபோன உடல்களை ஆங்காங்கே காட்சிக்கு வைத்து உணர்வுகளை வேட்டையாடியிருக்கிறார். இன்னும் பல உரையாடல்கள் சம்பவங்கள் வழக்குகளை பற்றிய தரவுகளை முன்வைக்கின்றது கலவர காலத்தில் காவல்துறை ஆட்சியராக இருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல்.
நிலுவையிலிருக்கும் இரண்டாயிரம் வழக்குகளில் இரண்டில் தீர்ப்பு வந்தாலே மோடி அவ்வளவுதான் என நிறைவடையும் புத்தகம் எழுதப்பட்டது 2010-ல், அடுத்த நான்காண்டிலிருந்து தற்போது வரை பிரதமராக நமக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். என்ன மாதிரியான நீதித்துறையை கொண்டது நமது நாடு. சமீபத்தில் தீர்ப்பு வெளியான சொத்துக்குவிப்பு வழக்கிலும் நீதித்துறை நடந்துகொண்ட விதம் நம்பிக்கையை குலைப்பதாகவே உள்ளது. மீண்டும், என்ன மாதிரியான நீதித்துறையை கொண்டது நமது நாடு??

8 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லதொரு புத்தக அறிமுகம்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
நூல் பற்றிய அறிமுகம் சிறப்பு படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

K. ASOKAN சொன்னது…

அருமையான பதிவு

Yarlpavanan சொன்னது…

நல்லதோர் அறிமுகம்

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி.

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி.

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றியுடன்

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி.