சனி, 5 ஆகஸ்ட், 2023

அவ்வப்போது

என்னென்னவோ வரைய வேண்டும் என எண்ணம் கடல் அலை போல விடாது சிதறித் தெரிக்கும். எந்தவொரு படைப்புச் செயலிலும் வெளிப்படுத்த நினைப்பதை உருக்கொண்டு வர கொஞ்சமேனும் சிக்கல்களுக்கு இடமிருக்கும். 

என்னையும் வரைந்து கொடு என தம்பி, சித்தி மகன் கேட்டவுடன் தீட்டியது.

தம்பி முத்துவின் மகள் மகிழினி. 


ஓவியர் சந்ரு அவர்களுடைய ஓவியக் கண்காட்சி தற்போது தக்சன் சித்திரா ஓவியக் கூடத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றிய ஆங்கில கட்டுரை வாசிக்க கிடைத்தது அதில் அவரது கோட்டோவியத்தில் பறவையொன்று வேர்பிடித்து அசையாமல் நின்று தன் அலகில் வண்ணத்துப்பூச்சி ஏந்தி நிற்கும் காட்சி இயற்கையை இயங்கவிடாமல் சிறை பிடித்திருக்கும் இன்றைய காலத்தில் ஆற்றாமையை வெளிப்படுத்திய விதம் ஏற்படுத்திய தாக்கத்தில் வடிவமைத்து பார்த்த ஓவியம்.


அவ்வப்போது மனதில் தோன்றும் காட்சிகளை வரைந்து வைத்துவிடுவதில் ஒரு அமைதியும் மகிழ்ச்சியும்.


 

கருத்துகள் இல்லை: