திங்கள், 25 ஜூலை, 2016

கனவு நீர்

களத்து வேலையா கணினி வேலையா என்ற நினைவெல்லாம் இல்லை, அந்த நொடிக்கு முன்சென்று அதைப்பற்றி ஆராய்ந்து சோர்ந்து போக விருப்பமில்லை. வயற்காட்டு ஓரமாக பொடி நடையாக நடந்து கொண்டிருக்கிறேன். குளத்துக்கரையோரம். மெல்ல தண்ணீர் திரண்டு வருகிறது, ஆடி மாசமாதலால் ஆடிப்பெருக்கு நினைவில் வந்து போன கணத்தில். வெள்ளம். கரை உடைத்து வயல் புகுந்தது. வெள்ளத்தில் சிக்காத நான் தத்தளித்து கரை சேர முயற்சிக்கும் இருவரை பார்க்கிறேன். பார்த்து திரும்பிய மறுநொடி வெள்ளம் வடிந்து போனது. கரை உடைப்பு மட்டும் குளத்துக்குள் செல்ல வழிபோல மாற்றம் கண்டுவிட்டது. என்னவென்று எட்டிப்பாக்கப்போனால் ஒரே கருவேலமரக் கூட்டம். மரக்கிளைகளை நகர்த்தி பாவாடையை கீழிறக்கி நகரும் பெண்கள். மேற்குப்பாதையில் தலைப்பாகையும் குடையுமாக ஆண்கள் வேட்டியை தூக்கிக்கொண்டு.

காலையில் ஆடிப்பெருக்கிற்கு நீர் திறந்துவிடுவது பற்றி செய்தி கேட்டபோது கனவும் நினைவில் வந்தது. அவ்வளவு தான்!

2 கருத்துகள்:

K. ASOKAN சொன்னது…

மிக நன்று

KILLERGEE Devakottai சொன்னது…

நனவாகும் நண்பரே
த.ம. 1