திங்கள், 19 பிப்ரவரி, 2018

வெண்ணிற இரவுகள் - வாசிப்பு

முன்பொரு முறை நூலகத்திலிருந்து சூதாடி புதினத்தை எடுத்து வந்து வாசிக்கும் பொழுது அதன் தொடர்ச்சியான எழுத்து ஓட்டம் மலைப்பை ஏற்படுத்தி திருப்பி கொடுக்கச் செய்தது, அது வெற்றுப்புலம்பலாகப் பட்டது எனக்கு, அதுபோலவே இருந்தது வெண்ணிற இரவுகள் ஆனாலும் கதை உள்ளத்தின் ஒட்டடைகளை விலக்கி பல நினைவுகளையும் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது, ஒருவேளை இப்போது சூதாடியை வாசித்தால் ஏதாவது புலப்படுமோ என்னவோ. இப்படியான தொடர் உரைநடையின் வடிவில் எழுதப்பட்ட "பாகீரதியின் மதியம்" தமிழ் புதினம் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது.

நாஸ்தென்காவிடம் தன்னைப்பற்றிய கடந்த காலத்தை விளக்குவதை நாடக பாணி என ஒப்புக்கொண்டே சன்னதம் வந்தது போல இடைவிடாது சொற்கள் பனியாய் கொட்டத்தொடங்குகிறது அவனிடமிருந்து, ஆனால் நாஸ்தென்கா அவளைப் பற்றி கூறுமிடம் உரைநடையில் மாற்றம் தெரிகிறது,  அவரவர் மனவோட்டத்திற்கேற்ப எழுத்தை கட்டமைப்பது கதையாசிரியனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைவிட வாசகருக்குள் அவ்வேறுபாட்டை உணரவைப்பது மிக முக்கியம்.

இருவருக்குள் நடைபெறும் பெரும் உரையாடலை அல்லது புலம்பலை இறுதியில் கதையின் மையமான பாத்திரமொன்று வெகு இயல்பாக முடித்து வைக்கிறது, அவனது தனிமை அங்கிருந்து மீளத்தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை: