ஞாயிறு, 13 டிசம்பர், 2020
ஒக்கிட்டுத் தாருமய்யா
சனி, 12 டிசம்பர், 2020
ஓவியம் பழகுதல்
சனி, 5 டிசம்பர், 2020
செவ்வாய், 6 அக்டோபர், 2020
வெள்ளி, 3 ஜூலை, 2020
திங்கள், 22 ஜூன், 2020
சனி, 23 மே, 2020
கோபுரம் - விமலாதித்த மாமல்லன்
ஒரு ஓவியனைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ கதையின் போக்குக்குள் இயல்பாக நுழைந்துவிட்ட மனம் பார்வையற்றவன் எப்படி வரைகிறான் என்றும் உழன்றது, பார்வையுள்ளவனை விட இவர்கள் நுட்பமானவர்கள் என எண்ணும் பொழுது கதையின் மாயம் மெல்ல விலகப் பார்த்தாலும் விலகுவதில்லை.
திங்கள், 18 மே, 2020
ஒளியிலே தெரிவது - வாசிப்பனுபவம்
ஞாயிறு, 17 மே, 2020
சைகை
வியாழன், 14 மே, 2020
சங்கச் சித்திரங்கள் - வாசிப்பனுபவம்
புதன், 13 மே, 2020
கதைகள் உருவாக்கும் பாதை
சனி, 9 மே, 2020
நினைவுகளின் சுவட்டில்
சனி, 25 ஏப்ரல், 2020
பால் பால்
ஞாயிறு, 19 ஏப்ரல், 2020
இது யாருடைய வகுப்பறை - வாசிப்பு
சனி, 11 ஏப்ரல், 2020
கொரோனா காலம்
வியாழன், 5 மார்ச், 2020
ஒட்டகம் கேட்ட இசை - வாசிப்பு
செவ்வாய், 3 மார்ச், 2020
சனி, 29 பிப்ரவரி, 2020
செவ்வாய், 25 பிப்ரவரி, 2020
குருவி மடம் - கசாரா
திங்கள், 24 பிப்ரவரி, 2020
வெள்ளி, 21 பிப்ரவரி, 2020
இரவு- வாசிப்பினிடையே
வாசிப்பு எதற்கென்று கேட்டால் அதுவொரு தேடுதலுக்கானது எதைப்பற்றிய தேடல் என்பது வாசகனின் எண்ண ஓட்டத்தை பொருத்து மாறுபடக்கூடியது. மிகச்சாதாரணமான மனிதனுக்கு தன் சுற்றத்தை நேசிக்க ரசிக்கத் தெரிந்தவனுக்கு தன் எதிரே புதிராக இருக்குமொன்றை அதாவது பெயர் அறியாத மலரினை அறிய முற்படுவதுபோலவும் நவீன ஓவியத்தின் உள்ளொளியை உணர்வதும் போலவுமான தேடல். தொழில் காரணமாக கேரளம் செல்லும் சரவணன் காயலுக்கு அருகிலுள்ள ஒரு புதிரான வீட்டு மனிதர்களை அறிய முயல்வதே தேடலின் தொடக்கம் அது இரவைப் பற்றிய தேடலாக தொடர்கிறது. ஓவியர் முகர்ஜி அறிமுகமாகும் இடத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓவியம் வரைய வேண்டுமென்ற எண்ணம் பீரிட்டு எழுகிறது.
நவீன ஓவியங்களை புரிந்துகொள்ள நவீன இலக்கியங்கள் வழிகோலும் என்பதை பிறழ்வின்றி நிகழ்த்திப்போகிறது இப்புதினம். ஒரு கீற்றிலிருந்து தொடக்கம் கொள்ளும் ஓவியம் பார்வையாளனை அடையும் பொழுதில் கீற்றுகளின் கோர்வையாகவும் உருவங்களை மீறி தனித்தெரியும் கோடுகளாகவும் சிதைந்து போவது நவீனத்தின் ஓட்டம். இரவுக்கும் பகலுக்குமான இடைவெளி எந்த வண்ணத்தால் கோடு கிழிக்கப்படும் அதுவொரு சாம்பல் நிறத்தினை ஒத்ததாக இருக்குமா
புதன், 19 பிப்ரவரி, 2020
முகங்கள்

மணிக்கூண்டு எதிரே தெரியும் மரங்களுக்கிடையிலான கோபுரத்தை வரையத் தொடங்கினேன், மனம் ஒருங்கிணையவில்லை.
பின் பக்கம் திரும்பி கூண்டை நோக்கினேன் கோடுகளை நீட்டும் பொழுதில் பின்பக்கம்ல் நாயொன்று "வவ்..வவ்" என்றது, கூண்டு அருகேயிருந்தும் எதிர் ஒலி வந்த பிறகுதான் அங்கும் நாய் இருப்பதை கவனித்தேன். குரைப்புக்கு நடுவே கோடுகளை நீட்டி மடக்கினேன், முடிக்கும் தருவாயில் சரவணன் அண்ணனும் வருணும் திறந்தவெளி அரங்குக்குள் வந்துவிட்டனர். அவர்கள் அருகே சென்று நலம் விசாரிப்புகளுக்குப் பின் வருண் அவரைப் பார்த்து வரைய ஏதுவாக அமர்ந்தார் நானும் பென்சிலையும் தாளையும் எடுக்கவும் "ஓ நீங்களும் வரையுரீங்களா" எனச் சொல்லி சற்று திரும்பி இருவருக்கும் ஏற்றதொரு கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டார், கீற்றுகளை உருவாக்கிய பொழுதில் நான்கு பெண்கள் அருகில் வந்து அவர்களை வரைந்து தர முடியுமா எனக்கேட்கவும், ஆளுக்கொருவராக இரண்டு பேர் எங்கள் எதிரே புன்னகையோடு காத்திருக்க, சற்று பதட்டத்துடனே அவளின் வலது காதுக்கு மேலுள்ள முடியிலிருந்து கிறுக்குகையில் ஓரப் பார்வையில் வருணின் பலகையைப் பார்த்தேன், அவரது தொடக்கம் வேறொரு கோணம். முதல் முறையாக அறியாததொரு முகத்தை நேரடியாக வரையும் நடுக்கம் இருக்கத்தான் செய்தது மனதளவில். இடையில் சிறு குழந்தையொன்று அவளது தந்தையுடன் வந்து மழலையுரையாடி கொஞ்சம் வரைந்துவிட்டும் சென்றாள்.![]() |
| வருணின் கீற்றுகள் |
![]() |
| குழு மற்றும் வரைய முன்வந்த நான்கு முகங்கள் |

அன்றைய பொழுதினை முடித்துக் கொண்டு காஃபி அருந்த சென்ற போது ராஜா முருகனும் எங்களோடு இணைந்து கொண்டார். பேச்சுகளுக்கிடையே முகேசின் வாழ்க்கை இன்னல்களையும், வரைதல் சார்ந்த அவரது தேடலும் புரிதலும் வியப்பும் ஆச்சரியமுமாக தொடர்ந்தது. இது தொடர வேண்டும்.
சனி, 15 பிப்ரவரி, 2020
இரயில் பயணத்தில்
சனவரி 26 அன்று ஞாயிரோவியம் குழுவோடு என்னை இணைத்துக் கொண்டேன். அண்ணா நகர் கோபுர பூங்காவில் ஒன்று கூடி வரைந்து கலையினை தேடிக் கண்டடையும் ஓர் வினோத விளையாட்டு. ஓவியர் ஜெயக்குமார் அன்றைய நாளை சிறப்பு செய்தார் அவரது கலை பற்றிய உரையாடலை சிறு குறிப்பாக முன்னரே எழுதியிருந்தேன்.
கடந்த ஞாயிரன்று கொஞ்சம் சீக்கிரமாக சென்று விட்டதால், தனியாக அமர்ந்து மரத்தினையும் அதனருகிலிருந்த ஒருவரையும் வரைந்து கொண்டிருந்தேன், ராஜேஷ் என்றொரு நண்பர் வந்தமர்ந்து கலை பற்றி உரையாடவும். பின் சில நேரத்தில் சரவணனும், வருணும் வந்து சேர்ந்தனர். தொடர்ச்சியாக பிற ஓவியர்களும் வந்தமரவும், ஓவியர் முனுசாமி அவர்களும் கலந்து கொண்டு உரையாடினார்கள். சிலருக்கு வெறுப்புண்டு, வரைவதற்காக ஒன்று கூடினால், தொடர் பேச்சுகள் அதை உருவாக்கத்தானே செய்யும்.செவ்வாய், 11 பிப்ரவரி, 2020
சனி, 8 பிப்ரவரி, 2020
செவ்வாய், 28 ஜனவரி, 2020
இது அத்திகாவாப்பா!!
திங்கள், 27 ஜனவரி, 2020
ஞாயிரோவியம்
ஓவிய நிகழ்விவை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்யும் சித்திரக்காரன் அண்ணனுக்கு வாழ்த்துகள்.
வெள்ளி, 24 ஜனவரி, 2020
நட்சத்திரவாசிகள் - வாசிப்பனுபவம்
இப்பணி சார்ந்த உட்கட்டமைப்புகளை, அதன் ஒவ்வொரு நிலையிலும் செயல்புரியக்கூடிய மனிதர்களைப் பற்றிய அவதானிப்பும் பண்புகளும் மிக இயல்பாக கூறப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. நேர மேலாண்மையில் இத்தொழிலில் பணி செய்வோரில் எவ்வளவு பேர் பின் தங்குகிறார்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகவும் கவனத்திற்குரியது, குறிப்பாக வேலையை ஒதுக்கிவிட்டு விளையாடுவதும், சமூக வலைதளங்களில் பொழுதை கழிப்பதும் அல்லது வேலைகளுக்கிடையிலேயே (அப்படியும் ஆட்களுண்டு, ஒருவேளை காதில் பாடலோ வசனமோ ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டுமென மரபின் வழி, காடு கழனியில் வேலை செய்த நாட்டுப்புற மக்களின் பாடலிலும் பேச்சிலுமிருந்து நமக்குள் கடத்தப்பட்டிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது) செல்பேசியில் படம் பார்ப்பதும், பாடல் கேட்பதும், இயல்பாக மாறியிருக்கிறது, ஒரு நாளில் எத்தனை முறை நமது விரல்கள் செல்பேசியை தடவிக் கொடுக்கின்றன என எண்ணிப் பார்த்தால் இது விளங்க வாய்ப்பிருக்கிறது. இதுவொரு பொது நோயாகவும் மாறியிருப்பது வருந்தத்தக்கது.
சத்தியமூர்த்தியின் பழைய அலுவலகத்திலிருந்த பிள்ளையார் தற்போது சாய்பாபாவாக மாறியிருப்பதை பகடி செய்திருப்பது போன்ற சில காட்சிகளை நுட்பமாக அணுகவேண்டியிருக்கிறது. அதற்கிடையே "அவளால் வேலையை விட முடியவில்லை. குழந்தையை டே-கேரில் விட முடிந்தது" என்பது சினிமாத்தனமான வாசகமாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக கடந்து விட இயலாத இக்காலத்தின் மாற்றம். டீக்கடை பையனிடம் சிட்டையில் தான் கடனாக வாங்கிய பணத்தினை சாஜூ குறித்துக்கொள்ளச் சொல்லும் பொழுதில் "ஐ.டி வேலைய விட்டுட்டு பிரியாணி விக்கிறோம்" எனச் சொல்லி அலுவலகத்திற்கு முன் பிரியாணி விற்ற இருவர் நினைவில் வந்தார்கள். மணியின் கடை அரசாங்கத்தால் இடித்து நொறுக்கப்படுகிறது, காலம் யாரையும் ஓரிடத்தில் நிரந்தரமாக்கி அழகு பார்க்க எண்ணுவதில்லை மாறாக அது தன் நீண்ட தும்பிக்கையால் எல்லோரையும் அசைத்துப் பார்க்கிறது.
நாவலின் வடிவத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் கார்த்திக், உதாரணத்திற்கு, முப்பத்தியாறாவது அத்தியாயத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பிச்சைமணியோடு இரண்டாவது அத்தியாயத்தை முடிச்சிட்டிருப்பது. கடைசி அத்தியாயம் வாசிக்கும் பொழுதில் அது நம்மை முதல் அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்வதில் இருக்கும் சுழற்சி.
வாழ்வின் நிலையற்ற தன்மையின் காட்சிப் பொருளாகி நிற்கும் அத்தனை மனிதர்களும், இறுதியில் கனத்த அழுத்தத்தை மனிதில் இருத்துகிறார்கள்.

















