வெள்ளி, 25 ஜூலை, 2014

புலன்களை ஒட்டிப்பார்க்கிறேன்

ஒவ்வொரு
கதையும் கவிதையும்
வாசிக்கப்படும் பொழுதுகளில்
அதனதன் எழுத்துக்களுக்கு
ஏற்ற வடிவங் கொணர்ந்து
வேறு வேறு
உருவங்கள் வந்து
உருண்டோடும் மனதில்..
கடந்த
சில வாரங்களில்
வந்து போகும்
உருவத்தில் ஏனோ
காதும் கண்ணும்
மூக்கும் உதடும்
தொலைந்து போயிருந்ததால்..
சமயங்களில் புத்தகத்தின்
முகத்தை மூடிவிட்டு
உருவத்திற்கு அதன் புலன்களை
ஒட்டிப் பார்க்கும்
விருப்பில்
கரைந்து போகிறேன்...

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நல்லதொரு கவிதை
வாழ்த்துக்கள், நண்பரே...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்


இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


அறிமுகப்படுத்தியவர்-காவியகவி


பார்வையிட முகவரி-வலைச்சரம்



-நன்றி-


-அன்புடன்-


-ரூபன்-