செவ்வாய், 29 ஜூலை, 2014

கண்ணீர் மலர்கள்

இறந்தவனின்
கண்ணீர்த் துளிகளாய்
சிகப்பும் மஞ்சளும்
பச்சை யிலையுமாய்
சிதறிக் கிடந்த
மலர்கள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன
மிதித்துக் கடந்துபோன
நான்குகால் வாகனத்தின்
திசை நோக்கி .......

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


பூக்களைப்பற்றி....
நல்லதொரு கவி.

இளமதி சொன்னது…

மணம் மட்டுமன்றி
மனமும் கொண்ட மலர்கள்!

அருமை! வாழ்த்துக்கள்!