சனி, 14 ஜூன், 2014

அறிமுகத்தில் அவள்களும் அவன்களும்

மெக்காலே கல்வி முறையில் 
அறிவியல் என்றும் வரலாறு என்றும் 
எழுதப்பட்ட புனைவுகளின் 
தொகுப்புகளைக் கடந்து 
எனது வாசிப்புக்கு 
வாழ்வியல் புனைக்கதைகளையும் 
உண்மைக் கதைகளையும் 
அறிமுகப்படுத்திய அவள்களும்...

எங்களின் முதல் ரயில் பயணத்தில் 
பொன்னியின் செல்வன் வழி 
கல்கியை புதியதாகவும் 
விகடனை வேறு கோணத்திலும் 
வரும் நாட்களில் சுஜாதாவையும் 
சிறு குறு நாவல்களையும் 
அறிமுகப்படுத்தி விட்டு 
இன்றும் இணையத்தின் வாயில்களை 
பகிர்ந்து கொள்ளும் அவனும்...

இந்திய ஆங்கில நாவல்களையும்
கவிதைகளையும் கதைகளையும்
என் பசியாற கொடுத்த 
இவனுமென.....
அவள்களும், இவன்களும்
என்றென்றும் நிறைந்து கிடக்கின்றனர் 
கண்மூடிக் கனவிலிருக்கும்
பொழுதுகளில்........

5 கருத்துகள்:

Vimalan Perali சொன்னது…

உறங்கிக்கிடக்கிற அவன்களும்,இவள்களும் எல்லோரிலுமாய்/கனவிலும் நிஜத்திலுமாய்.அவர்களுக்கு நன்றியைச்சொல்வோம்

rajjeba சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் அய்யா..

பெயரில்லா சொன்னது…

Hello There. I found your blog using msn. This is a very well written article.
I'll make sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post.
I'll definitely comeback.

my page; Panic disorder

Pandiaraj Jebarathinam சொன்னது…

பெயரில்லா கூறியது...Hello There. I found your blog using msn. This is a very well written article.
I'll make sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post.
I'll definitely comeback./////

hi, thanks for reading my post. Do you understand tamil? If u then plz tell me how...

Pandiaraj Jebarathinam சொன்னது…

நம் குரல் குழுவிற்கு என் மனம் கனிந்த நன்றிகள் பல...
உங்களின் வருகையும் வாசிப்பும் என்னை மேலும் மெருகேற்றும் ..
உங்களது வலைப்பக்கத்தில் நிச்சயம் பங்கு கொள்கிறேன்...