வியாழன், 30 ஜனவரி, 2014

குயில் தன் நிலை கூறல்...

குக்கூ.... குக்கூ....

என்ன அன்பா
துயில் கொண்டாயா..

நான் கூவும்
அழகியலை ரசித்து
பயணப்பட்ட
உன் வாழ்வு

இன்று
மின்னணு யந்திரத்தில்
என் போல்
கீச்சிடும் சத்தங்களைக்
கேட்டுத் தூங்கிப்
போகிறது !!

உன்
சுக துக்கத்தை
பசுமையாவும்
இதமாகவும்
நிலை கொள்ள
எனை ரசித்து
மகிழ்ந்தாய் !!

நான் ங்கு
வீசும் கதிர்வீச்சில்
காணாப் போனது
நினைவில்லையா ?!

என்னை
பசுமையாக்க வினவ
இல்லை
உயிர் பிழைக்கவாவது
செய்தருளேன்..

குக்கூ....குக்குக்கூ......

கருத்துகள் இல்லை: