எங்கிருந்து இப்பறவைகள் கோடாக என் தாள்களில் இறங்கி ஓடியதென்று இவ்விரவைக் கேட்கிறேன்
ஏதுமில்லையென்று
சொல்வதற்கன்றி
வேறெதெற்குமில்லை பிறப்பு
ஏதுமற்றதே
எதையாவது செய்யவும்
உந்துகிறது