திங்கள், 10 ஏப்ரல், 2023

வண்ணங்களின் வாழ்க்கை நூல் அறிமுகம்

தமிழக ஓவியர்கள் பற்றிய அறிதலுக்கும் அவர்களின் படைப்புலகம் சார்ந்த உணர்வை பெறுவதற்கும் சிறந்த நூல்களில் ஒன்று எழுத்தாளர் சுந்தர புத்தன் தொகுத்திருக்கும் "வண்ணங்களின் வாழ்க்கை". தமிழ் நாட்டில் ஓவியம் பற்றி வெளியாகியிருக்கும் மிக முக்கியமான கவனத்திற்குரிய நூல்.

நூல் பற்றிய சிறு அறிமுகக் காணொளி

திங்கள், 3 ஏப்ரல், 2023

உணவோடு கதைத்தல்

காலை உணவு வேளை கதையோடு நகர்வதுண்டு, சென்ற வாரம் வரை "வால் இழந்த எலி" என்ற கதைதான் தொடர்ச்சியாக நாள்தோறும் வாசித்தோம். இன்று காலையில் அதே புத்தகத்தை தேடியவளது கண்ணில் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியின் முதல்வர் திரு.வெற்றிச்செழியன் எழுதிய "விடுதலை கிளிகள்" புத்தகம் அகப்பட்டதும் "அப்பா கதைப்பாடல்கள் எடுத்துட்டு வாரேன்ன, ஐயா எழுதுனது. இதுல ஒரு திருடன் கதையிருக்கும் அத படிப்பமா" என்றாள் இயல்.

சனி, 1 ஏப்ரல், 2023