சனி, 18 ஜூலை, 2026
வாசிப்பின் இடையிடையே
வியாழன், 11 ஜூன், 2026
வாசிப்பினிடையே
செவ்வாய், 31 மார்ச், 2026
வதம் செய்வோம் வேங்கைகளே
வெள்ளி, 3 ஜனவரி, 2025
நிலமும் உயிர்களும் - வாசிப்பு
சனி, 23 நவம்பர், 2024
காலவெளி - வாசிப்பு
செவ்வாய், 2 ஜூலை, 2024
க்ளிக்
திங்கள், 29 ஏப்ரல், 2024
பிசிறு சிறுகதை வாசிப்பு
சனி, 22 ஜூலை, 2023
நூலகத்தில்
திங்கள், 26 ஜூன், 2023
மிதவை மீள் வாசிப்பு
திங்கள், 3 ஏப்ரல், 2023
உணவோடு கதைத்தல்
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022
முகங்(கலை)தல்
கலை அப்படின்னா என்ன அதுவொரு மாய உலகமா எளிதில் எட்டி விடாதா தொலை தூரத்தில் உள்ளதா, எது கலைப் படைப்பு எதனால் அது கலைப் படைப்பாகிறது, எது அழகு எதனால் அது அழகு , எந்த இடத்தில் கலை உருவாகிறது யார் உருவாக்குகிறார்கள் என பலதரப்பு கேள்விகள் நம்மைச் சூழலாம் அல்லது இவை எதுவும் என்னவென்றே அறியாது ஒதுங்கி நிற்கலாம் அப்படி நிற்பதில் கூட கலைக்கான செயல்பாடு எதாவது இருக்குமானால் இருக்கலாம் அதை அறியாததால் என்னவென்றே தெரியாததால் அது காற்றில் கலந்து விடுகிறது அந்த காற்றை எல்லாருமே உள்ளிழுப்பதால் யாருக்காவது அதாவது கலை பற்றிய தேடலில் வானத்தைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கும் உயிரான ஒன்று அதை இழுத்துக் கொள்வதால் ஒரு புன்னகையில் அக்காற்றை வெளியிடுகிறது அல்லது வேக வேகமாக தாளை எடுத்து எதையும் எழுதவோ வரையவோ துணியாமல் மீண்டும் வானத்தையே பார்க்கத் தொடங்கினால் வேரொரு உயிர் தூரிகையால் வண்ணங்களை குதப்பி அப்புகிறது என்னவென்று கேட்டால் தெரியவில்லை என உரத்துச் சிரிக்கிறது வேறு சில அவ்வுயிரியை நவீனம் என்கிறது. நவீனம் பெருங் குழப்பமடைந்து ஆமாம் ஆமாம் என்று தான் தெரியவில்லை புரியவில்லை எனச் சொன்ன வண்ணங்களுக்கு புது மொழி பெயர்ப்பு செய்கிறது, ஆமாம் எழுத்தைத் தானே மொழி பெயர்ப்பார்கள் இதுயென்ன ஓவியத்தையும் பெயர்க்கிறது. கலை என்பதற்கு வடிவம் எதுவுமில்லை அதுவொரு உணர்ச்சிக் கடல் அது எந்த உயிருக்கும் உண்டு இன்னாருக்கு உண்டு இன்னாருக்கு இல்லை என்று எதுவுமேயில்லை. வரைவதும் எழுதுவது இசைப்பதும் நடிப்பதும் ஆடுவதும் மட்டுமே கலையா. கனவிலும் உணர்வுண்டு கழிப்பறையிலும் உணர்வுண்டு என மேம்போக்காக சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் பொது உயிரிகளிடம் பேசும் போது முகஞ்சுழிக்கக் கூடுமாகையால் இன்னும் கொஞ்சம் விளக்கியும் விலக்கியும் கூறவேண்டியதாகிப் போகிறது. அந்த உயிரி வரைந்த கரிக்கோல் ஓவியத்தை இரண்டு நாள் கழித்து பார்த்துவிட்டு இதை ஏன் வரைந்தேன் என நொந்தது, மீண்டும் ஒரிரு மாதம் கழித்து அதே ஓவியத்தை பார்த்ததும் அதிலுள்ள கோடுகளெல்லாம் தெரிந்தது அட இந்தக் கோடு எவ்வளவு ஒயிலாக திசை மாறுகிறது என்றெல்லாம் தனக்குத் தானே கேட்டுவிட்டு இணையத்தின் ஊடாக சில ஓவியங்களை பார்க்கிறது அங்கேயும் கோடுகளை மேய்கிறது, அப்பாடா என்று இன்னும் சில முகங்களை கோடுகளாக்குகிறது. ஆமாம் எது கலை எது அழகு எது படைப்பு.
புதன், 17 ஆகஸ்ட், 2022
தொடர் வரைவு ஏழும் புத்தகங்களும்
ஒவ்வொரு நாளும் வேறு வேறு ஓவிய வகைமைகளை வரைந்து பார்க்க வேண்டுமென்று நேற்று காலையில் ஒரு எண்ணம் விரிவடைந்தது. முகம், முழு உருவம், நோக்குநிலையில் காணும் பொருளை அல்லது இடத்தை வரைவது, அரை மணி நேரத்தில் ஒரு வண்ண ஓவியம் என ஒரு நாளுக்கு ஒன்று என வரைந்து பார்க்கலாம்.
இப்பதிவு எழுதும் சில நிமிடம் முன் வரைந்தது, போன வாரம் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்த போது எதேச்சையாக ஒரு கருப்பு தூவல் (பேனா) கண்ணில் பட்டது (Goldex என்று அதன் மீது எழுதியிருக்கிறது, இதுவரை பார்த்திராத கேள்விப் படாத நிறுவனம்), எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது படம் வரைவதற்கு. எங்கள் வீட்டு அலமாரியில் ஓவியங்களை வைக்க இடம் கொடுத்து கட்டிலில் காத்திருக்கும் கனவான்கள் இப்புத்தகங்கள். தடித்த புத்தகங்களுள் பாகீரதியின் மதியம் மனதுக்கு மிக நெருக்கமான புதினம். பக்கங்கள் அதிகமானாலும் அது கொடுக்கும் பயணம் பேரானந்தம்.
புதன், 8 ஜூன், 2022
நீர் நிலம் வனம் - கடல்
செவ்வாய், 29 மார்ச், 2022
வலி - விமலாதித்த மாமல்லன்
திங்கள், 10 மே, 2021
ஓவியர் ஆதிமூலம்
சனி, 6 பிப்ரவரி, 2021
கற்றலை நோக்கிய பயணம்
கடந்த நான்கு வருட இடைவெளி விட்ட பயிற்சியில் தற்போது ஓரளவு முகங்களை வரையக் கற்றுக் கொண்டேன்/கொண்டிருக்கிறேன். மனித முகங்களை கற்றறிவது அவ்வளவு சுலபமல்ல, ஆனால் அவர்களை உணர்ந்து கொள்ள தலைப்பட்டால் மிக எளிமையாக பாவனைகளை கோடுகளாக்கி விடலாம் என்பது புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறது. மிகக் குறைவான படங்களையே பயிற்சி செய்திருக்கிறேன் என்பதலோ என்னவோ இன்னும் விரைந்து குறைந்த நிமிடங்களுக்குள் முகத்தை கோடுகளாக்கும் வித்தையை கைகொள்ள என்னை நானே தாமதப் படுத்துவது போன்றதொரு எண்ணம்.
வாசிப்பின் நேரம் வரைதலுக்கான நேரம் என பிரித்து செயல்பட நினைத்த நாட்கள் கடந்து, வாசிப்பது வெகு குறைவாகவும் வரைதலுக்கு அதிமுக்கியம் கொடுக்கவும் இவ்வருடத்தை பழக்கி வருகிறேன். இத்தோடு குழந்தைகள் வளர்ந்து வருவதாலும் அவர்களுக்கான கற்றல் செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை நாம் கற்க வேண்டியதொரு காலகட்டத்திற்குள் நுழைந்திருப்பதாகவே எண்ணிக் கொண்டு அவர்களுக்காக சில வாசிப்புகளை தொடங்கியிருக்கிறேன், செம்மை வெளியீட்டகம் பதிப்பித்திருக்கும் "மரபுக் கல்விக்கான பாடநூல்" என்ற புத்தகம் நல்லதொரு திறப்பை வாழ்விலும் கற்றல் முறையிலும் விளைவிக்கும் என எண்ணவைக்கிறது.
இன்றொரு எண்ணம் வரைதல் சார்ந்து மேலெழுந்தது, மனித முகங்களை எவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் வரைய இயலும் என்ற அவ்வெண்ணத்தை தொடர்ந்து செயல்படுத்த ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு முகம் என வரையலாம், இதனால் பல தரப்பட்ட புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முதல் இரண்டு படங்களிலேயே கண்டுகொள்ள இடமிருந்தது. தொடர்ந்து செயல்படத் தேவையான அகத்தூண்டலை உயிர்ப்பிக்க தன்னை நோக்கிய பயணமும் மிக அவசியமான ஒன்றாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்று வரைந்த இரு பத்து நிமிடப் படங்கள்.
சனி, 23 மே, 2020
கோபுரம் - விமலாதித்த மாமல்லன்
ஒரு ஓவியனைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ கதையின் போக்குக்குள் இயல்பாக நுழைந்துவிட்ட மனம் பார்வையற்றவன் எப்படி வரைகிறான் என்றும் உழன்றது, பார்வையுள்ளவனை விட இவர்கள் நுட்பமானவர்கள் என எண்ணும் பொழுது கதையின் மாயம் மெல்ல விலகப் பார்த்தாலும் விலகுவதில்லை.












