"இன்னும் பன்னெண்டு மணி ஆவலடே..முடியுமா"
"எங்க ஊர்ல மணியடிச்சா போதும்னுட்டாங்க"
"சங்கு ஊதும் போது ஒருத்தேன் அந்த எடத்துலயே குளோசு"
"தம் கெட்டணும்லா, முடியாது ப்பா, அடைச்சிக்கிடும்"
"இன்னும் ஒருதரம் ஊதேன்..ஆளுவ வந்து சேரணும்லா"
"இனும செல்லுல போட்டுக்கிட வேண்டியதாங்"
"அதுலாங் ஊதுத மாதி வராதுலா"
"மத்தியானம் நேரமா வந்துரு.. பெறவு நீ பாட்டுக்கு ஊத்திக்கிடாத"
"என்னெ இன்னைக்கி ஒண்ணும் அம்புடல போலுக்கு"
"அர அடிச்சிட்டுத்தான் நிப்பான், இல்லனா வேல நடக்குமாங்கும்"
ஏற்றமும் இறக்கமுமாக குரல்கள் ஏனோதானோவென்று வந்து கொண்டிருந்தது ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப
ப்ப்ப்ப்ப்ப்....... ப்ப்ப்ப்ப்ப்...........ப்ப்ப்ப
என்ற சங்கொலிக்கு இடையிடையே.
ஒலிப்பு முடிந்ததும் தானொரு திரைப்படத்திற்காக சங்கு ஊதிய கதையை பிய்த்துப் பிய்த்து சாவு வேலைக்கிடையே சொல்லிக்கொண்டிருந்தார் முருகன்.