திங்கள், 11 ஜூன், 2018

கொமோரா - வாசிப்பு

சொரக்காபட்டியிலிருந்து கட்ராம்பட்டிக்கும் கம்போடியாவுக்கும் கதை தன்னை வெட்டி வெட்டி அங்கங்கே நிறுத்தி நகரும் தொடர்ச்சியற்ற பின்னல். கதையென்ற துணுக்கின் வழியே தத்துவ விசாரணைகளை நிகழ்த்திச் செல்கிறது.

ஒருவாரமாக கிடைத்த நேரத்தில் வாசித்து முடித்திருக்கிறேன், இவ்வாரத்தின் ஒவ்வொரு இரவும் கனத்த கேள்விகளை செரிக்க இயலாமல் கடந்து வந்தது ஆச்சரியத்தை எழுப்புகிறது, புதினங்களை வாசித்தல் என்பது வாசகன் தன்னை சுய விசாரணை செய்துகொள்ளக் கூடிய நிகழ்களம். அதற்கான ஊள்ளீடுகளையும் பரந்த வெளியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது கொமோரா.