ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 செப்டம்பர், 2026

சனி, 15 ஆகஸ்ட், 2026

நற்கீறல் - ஐம்பத்தி இரண்டு

நற்கீறல் ஐம்பத்தி இரண்டாவது வாரத்தை நேற்று சென்னை பாண்டி பசாரில் மனித முகம் வரையும் பயிற்சியுடன் நிறைவு செய்தோம். இந்த ஒராண்டுப் பயணத்தில் வெளிப்புறத்திற்கு சென்று வரைவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம்,  வேறுவேறு அளவிலான தூவல் கோட்டோவியங்களில் மரம், நிலப்பரப்பு, கோயில் எனத் தொடர்ந்து வரையும் பொழுதில் கற்றுக் கொண்டவை ஏராளம். ஒவ்வொரு இலையும் கிளையும் நிலமும் வரையும் கோடுகளும் வெவ்வேறு தன்மையுடையவை அவை கொடுத்த இன்பம் அதனினும் மேலானது.

வெள்ளி, 29 மே, 2026

வரைவும் செயற்கை நுண்ணறிவும்

சின்னச் சின்ன படங்களில் ஒரு கதை சொன்னால் எப்படி இருக்குமென நினைத்து சிறு சிறு கட்டங்களில் வரைந்து பார்த்தது முதல் படம். 

இந்த படங்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மீள் உருவாக்கம் செய்தால் எப்படி வரும் என எண்ணியதன் விளைவு இரண்டாவது படம். கதை பற்றிய எந்த விளக்கமும் அளிக்காததால் அதனுடைய புரிதலிலேயே கதையோட்டத்தை தீர்மானித்து முடிந்திருக்கிறது.


செவ்வாய், 7 ஏப்ரல், 2026

படாம்

 தனியார் மற்றும் அரசு காட்சிக் கூடங்களில் நடைபெறும் கண்காட்சிகளில் படைப்பை அது வெளிப்பட்டிருக்கும் வடிவத்தை மட்டுமே கண்டு நமது பார்வை நகரும் பொழுதில் ஏற்படும் இன்பம் அயர்ச்சி கோபம் வெறுப்பு என ஒவ்வொரு உணர்வும் படைப்புக்கான முழுமையை நிரப்பிக் கொண்டே செல்லும்.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் "படாம்" என்ற தலைப்பில் ஆடை வடிவமைப்புத் துறை இறுதியாண்டு மாணவர்கள் அவர்களது படைப்புகளை வகைப்படுத்தியிருந்த விதம் அறிதலுக்கான ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருந்தது. சாதாரண பார்வையாளனாக இந்தக் காட்சியை அணுகி அவை உருவாகி வந்த வழிமுறைகளை மாணவர்கள் விளக்கிக் கொண்டே வந்த போது எனக்குள் இருந்த மாணவன் விழித்துக்கொண்டு உற்சாகம் வெளிப்பட ஒவ்வொரு ஓவியத்திலும் ஆச்சரியத்துடன் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.

இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்த ஓவியங்களில் என்னை மறந்து அதிக நேரங்களை எடுத்து அதன் நிறம் உருவாக்குவது பற்றி மேலும் மேலும் உள்வாங்குகையில் அங்கிருந்து நகர இயலாமல் நகர்ந்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் வண்ணம் தயாரிக்க பொறுக்கி வைத்த முருங்கைப் பசைகளை இனியேனும் கையிலெடுத்து நிறமிகளோடு விளையாட வேண்டுமென உள்ளம் குறுகுறுக்கிறது.



செவ்வாய், 31 மார்ச், 2026

வதம் செய்வோம் வேங்கைகளே


எழுத்துக்களை விட ஓவியங்களின் வழியே வாசிக்கும் பொழுதில் தான் காமிக்ஸ் மேலும் ஆர்வமுள்ளதாகவும் தேடலுக்கு உரியதாகவும் மாற்றம் கொள்கிறது. இது ஜப்பானில் ஒரு சிற்றரசருக்கு கீழ் உள்ள சாமுராய் பற்றிய கதை.

டெட்சுவோவின் பயணத்தில் காடுகளும் மலைகளும் சமவெளிகளும் கோடுகளாக பயணிப்பது என்னையும் காட்சிக்குள் இழுத்துக் கொண்டது. முழுக்க முழுக்க கோட்டோவிய முறையில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள் உண்மையிலேயே மிரட்டுகின்றன. ஒவ்வொரு சட்டகத்தையும் பொறுமையாக உள்வாங்க உள்ளே கற்பனைக் கோடுகள் கட்டியணைக்கின்றன.

சனி, 31 ஜனவரி, 2026

நற்கீறல் - மணப்பாக்கம்




நற்கீறல் - பச்சைமலை

இயற்கையை ரசிக்கவோ அனுபவிக்கவோ கொண்டாடவோ வேண்டுமென்றால் அதனதன் போக்கில் வேடிக்கைப் பார்க்கலாம். அதே இயற்கையை உணர்வோடு உள்வாங்கவும் அதோடு கலந்து போகவும் அதனை ஓவியமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. அதிலுள்ள அசையும் தன்மையில் இன்றைய பொழுதையும் அசையாத வகைமையில் நேற்றையும் கோடுகளாக்கி அகம் மகிழ்வது நமக்கு உயிர் கொடுக்கும். ஒவ்வொருவரின் பார்வையும் வரையும் கோடுகளும் வேறு வேறு ஆனால் அடையும் உணர்வில் ஓவியத்துடன் ஒன்றிணைகிறோம்.

தாம்பரம் பச்சைமலையில் கடந்த வெள்ளிக்கிழமை நற்கீறல் நிகழ்வு நடைபெற்றது. நாங்கள் வரைந்து பழகினோம்.