ஞாயிறு, 22 மே, 2022

க(ன்)னி

எட்டாத கனியொண்ணு
ஏக்கமா தொங்குதாம்
தோரணத்து இலை பறிக்க
வந்தவன் கை 
வச்சவொடனே
உனக்கு கனி கேக்குதோ
கால்வாய் படியில
கன்னி கண்ட 
கண்ணுக்கு கனி 
இனிக்குமோன்னு மாவிலை
சலசலத்ததாம்
யாரு யாருன்னு
இவனுக்கு வேத்துப் போனதும்
காயொண்ண பறிச்சி
காம்புப் பால் வச்சி
"க(ன்)னி"ன்னு மரத்துல எழுதிட்டு
ஓடிட்டானாம்