இதுவரையில், நேற்று வரையில் ஓவியர் மாற்கு அவர்களது கோடுகளை இணைய வழியில் கண்டு காட்சியிலிருந்து விலகாத கண்களைக் கொண்டிருந்தவனுக்கு இன்று அந்தக் கோடுகளை நேரில் காணும் நற்பேறு கிடைத்தது. ஆசான் சரவணன் அண்ணனுடன் க்ரீம்ஸ் சாலை லலித் கலா கலைக்கூடத்திற்குச் சென்றிருந்தேன்.
தனியாகச் சென்றிருந்தால் அவரது கோடுகளுக்கு பின்னாலிருந்த உழைப்பையும் அவை வெளிப்படுவதற்கான மூலத்தையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது அன்பும் பிறருக்கு கற்றளிக்கும் நோக்கமும் முறையும் பாடமாக அமைந்தது. ஒவ்வொரு படைப்பும் நின்று அமர்ந்து பார்த்து கண்களால் கட்டியணைத்து உரையாட வேண்டியவை. நேரத்தினால் நகர இயலாமல் நகர்ந்து வந்தோம்.
சூலை 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது, ஒவ்வொரு ஓவியமும் சன்னலோர இருக்கை, பயணத்தில் இளைப்பாருங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக