வியாழன், 5 மார்ச், 2020

ஒட்டகம் கேட்ட இசை - வாசிப்பு

எழுத்துகளின் வழி கிடைக்கும் அனுபவங்களே வாசிப்பின் அடிநாதம் என எண்ணும் மனநிலை வரப்பெற்ற எனக்கு இத்தொகுப்பிலுள்ள அத்தனை கட்டுரைகளுமே பெரியதொரு அனுபவத்தை, நினைவு மீட்டலை, கற்றலுக்கான முன் ஏற்பாட்டை வழங்கியிருக்கின்றன. தேடலின் பாதையில் இளைப்பாறலுக்கிடையே கிட்டும் சக மனிதனின் நட்பு போல.