கடந்த சனிக்கிழமை Cybersecurity பற்றி வாசிக்க வேண்டுமென மூன்றாவது தளத்திற்குச் சென்றேன். அங்கங்கே இருக்கைகள் மீதம் இருந்தது. இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன் எதிரே இருந்த இருவர் மடிக்கணினியும் குறிப்பேடுகளும் வைத்து படிப்பது போல் இருந்தது. வலது பக்கத்தில் இருந்த இருக்கைகளில் ஒரு ஆணும் பெண்ணும் வந்து சிறு சலசலப்போடு அமர்ந்தார்கள். குறிப்பேட்டில் எழுதி இருப்பதை வைத்துக் கொண்டு மெல்லிய அந்தரங்கக் குரலில் அந்த ஆண் பெண்ணுக்கு ஏதோ பாடம் சொல்லிக் கொடுக்கிறான். (கொடுக்கிறான் என்று எழுதினால் கொடுக்கிறார் என்று தானாக சரிசெய்கிறது தட்டச்சு). பெரும்பான்மையானவர்கள் எவரும் அங்கிருந்த புத்தகங்களை எடுத்து வாசிப்பவர்களாகத் தெரியவில்லை. யாருக்கானது நூலகம் என்ற கேள்வி ஒலித்துக் கொண்டே இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக