வெள்ளி, 6 அக்டோபர், 2017

மௌனியிடம் பயில்கிறேன்

ஒருசில கதைகளுக்குப் பின் ஓரமாக வைத்திருந்த மௌனியின் படைப்புகளை புரட்ட ஆர்வம் மேலெடுத்தது. மூன்று நாட்களாக ஒவ்வொரு கதையாக (சிகிச்சை, மாபெருங்காவியம், எங்கிருந்தோ வந்தான்) வாசித்து முடித்தேன். மரணத்தை மையங்கொண்டே காதலை அன்பினை வெளிப்படுத்தும் மாந்தர்களை உருவாக்கி தன் புனைவு வெளியை சித்தரிக்கிறார். எங்கிருந்தோ வந்தான் கதையினை வாசிக்கையில் அரூப ஓவியத்தில் ஒழிந்திருக்கும் கீற்றுகளின் ஓட்டங்களை கூர்ந்து நோக்குவதுபோலத்தான் இருந்தது, சமயத்தில் கதையிலிருந்து வெளித்தள்ளி மனதினை காலவெளியில் அலைந்து திரிய விடுகிறது.

இக்கதைகளின் காட்சி சித்தரிப்பில் தேர்ந்த ஒளிப்படக்காரனின் உள்ளுணர்வும் ஓவியனின் பிரதிபலிப்புமாகவே விரிகின்றது.

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

விமர்சனமாய் விரியுங்கள்...