ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நாம் கூத்தாடிதான்... எல்லோரும் சொல்லும் பாட்டு

பாடல்கள் கேட்பது வெகுவாக குறைந்துவிட்டது கடந்த சில வருடங்களில், வாசிப்பு நேரத்தை எடுத்துக்கொள்வதால் பாடல்களும் திரைப்படங்களும் விலகியே இருக்கின்றன. கடந்த மாதம் அத்தை மகன் திருமணத்திற்காக ஊருக்கு சென்றிருந்த பொழுது, பாபநாசம் அருகிலுள்ள சிவந்திபுரம் மணமகள் வீட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். மனம் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நிழலாட்டங்களில் மயங்கிக்கிடந்தது வில்லுப்பாட்டு ஒலி கேட்டதும் காது அதற்கு இசைந்தது "கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ" எனும் பாடல், வாகனத்தின் குலுக்கலும் பாட்டின் துள்ளலும் சேர்ந்து மனம் ஒரு சிற்பத்தை கற்பனை செய்யத் தூண்டியது.


மறுநாள் சென்னை வந்ததும் பாடலை யூட்யூப்பில் திரும்பத் திரும்ப கேட்டு தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். இன்று காலை விழித்தவுடன் பாயிலிருந்து எழும்புவதற்கு முன்னே "நாம் கூத்தாடிதான்... எல்லோரும் சொல்லும் பாட்டு ..." என்ற வரிகள் குறுக்கும் நெருக்கும் ஓடிக்கொண்டிருந்ததன. என்னடா இந்த வரி என்று மீண்டும் மீண்டும் பாடிப்பார்த்தும் இவ்வரிகளைத் தாண்டி எதுவும் புலப்படவில்லை. எங்கிருந்து வந்து காலையிலேயே சோதனை செய்யுதென்று கூகுளில் தேடினால் மறுபடியும் படத்திலுள்ள பாடல். அடடா!! என்று கேட்கத்தொடங்கிவிட்டேன்.


2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பாடல்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..