சனி, 24 ஜனவரி, 2026

சாத்துக்குடி

தனித்துத் தொலைவிலிருந்து வருகையில் பேரூந்தோ ஈருருளியோ எதில் வந்தாலும் எங்கே சாப்பிடுவது என்ற நோக்கத்தில் உணவகத்தை நோட்டம் விட்டுக்கொண்டே வந்தால் வீடு வந்துவிடும். நண்பர்களோடு வெளியில் உணவருந்தும் போது இந்த கடையில் இதுதான் நல்லா இருக்கும் இதை இப்படி உண்டால் சுவையாக இருக்கும் என ஆணித்தரமாக சொல்வார்கள். எது சுவை என்றொரு கேள்வி எழும். எனக்குத் தெரிந்து உப்பு மற்றும் காரச்சுவை தவிர்த்து எதையும் சுவைக்க விடுவதில்லை நவீன உணவகங்கள்.

ஒருமுறை நண்பர் ஒருவர் அரத்தி (ஆப்பிள்) பழச்சாறு அருந்தினார் பக்கத்தில் இருந்தவர் விளையாட்டாக கொஞ்சம் கசப்பாக இருக்கிறது அல்லவா என்று கேட்டதும் ஆமாம் ஆமாம் என்று பரிமாறுபவரை அழைத்து சாற்றை மாற்றச் சொல்லி விட்டார். இவர் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் அவர் வெற்றுக் கோப்பையைத்தான் கீழே வைத்திருப்பார். இங்கே சுவை உணவில் இல்லாமல் இன்னொருவரின் கருத்துக்குள் புதைந்திருந்து வெளிப்பட்டுவிட்டது.

மும்பையில் தானா தொடர்வண்டி நிலையத்தில் இன் முள்ளங்கி (கேரட்) செங்கிழங்கு (பீட்ரூட்) சாறு எடுத்து இனிப்பு ஏதும் சேர்க்காமல் வாங்கிக் குடிக்கலாம். கண் முன்னே செய்து தருவார்கள். சில நாட்களாக அலுவலகம் செல்லும் ஆம்பிட் பூங்கா சாலையில் வட இந்தியர் நடத்தும் அப்படியொரு சாத்துக்குடி கடையில் ஒரு கோப்பை சாறு அருந்துவதும் அதன் தரமும் சுவையும் சிறப்பாக உள்ளது. இனி சுவை அறிய வேண்டும்.



கருத்துகள் இல்லை: